Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திருடுபோன அனுஷ்கா படத்தின் ரூ 1.5 கோடி நகைகள் சென்னையில்!
சென்னை: 'ருத்ரமாதேவி' படப்பிடிப்பில் மாயமான அனுஷ்காவின் நகைகள் சென்னையில் பதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ருத்ரமாதேவி என்ற சரித்திரப் படம் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் அனுஷ்கா ராணி வேடத்தில் நடிக்கிறார்.
ஸ்பெஷல் நகைகள்
அவர் அணிந்து நடிப்பதற்காக பல கோடி செலவில் தங்க, வைர நகைகள் வாங்கப்பட்டன. தலையில் அணியும் கிரீடம், கழுத்து மாலைகள், ஒட்டியானம் போன்றவை தங்கத்தால் இந்தப் படத்துக்காக செய்யப்பட்டன. அனுஷ்காவிடம் அளவெடுத்து பொற்கொல்லர்கள் இவற்றைத் தயார் செய்தார்களாம்.
அனுஷ்கா
ஹைதராபாத்தில் அரண்மனை அரங்கு அமைத்து அதற்குள் நடந்த படப்பிடிப்பில் அனுஷ்கா இந்த நகைகளை அணிந்து நடித்தார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் நடித்து முடித்ததும் நகைகளை உதவி இயக்குனர்களிடம் கழற்றி கொடுத்து விடுவார். அவை பெட்டிக்குள் வைத்து பூட்டி ஒரு அறைக்குள் பத்திரமாக வைக்கப்பட்டு வந்தன.
பொட்டிய காணோம்..
இப்படி வைக்கப்பட்ட நகைபெட்டிகள் திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டன. இதனால் படப்பிடிப்பு குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள். நகைகள் திருட்டு போனது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் படப்பிடிப்பு குழுவை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
படப்பிடிப்பு ரத்து
தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. திருட்டு போன நகைகள் கிடைத்தால்தான் அனுஷ்கா மீண்டும் ராணி வேடத்தில் நடிக்க முடியும் என்ற சூழ்நிலை.
சென்னையில்...
இந்த நிலையில் திருட்டு போன நகை பெட்டிகள் சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஹைதராபாத் போலீசார் சென்னை வந்துள்ளனர். இன்று இரவுக்குள் நகைகள் மீட்கப்படும் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.