இன்சூரன்ஸ் பணத்திற்காக பட செட்டுக்கு தீ வைத்தேனா?: கொந்தளித்த நடிகர்
Recommended Video
ஹைதராபாத்: சயீரா நரசிம்ம ரெட்டி பட செட் தீப்பிடித்து எரிந்தது தொடர்பாக பரவிய வதந்தி குறித்து அறிந்து நடிகர் ராம் சரண் தேஜா கோபத்தில் கத்தினாராம்.
மகன் ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் வரலாற்று படம் சயீரா நரசிம்ம ரெட்டி. அந்த படத்திற்காக சிரஞ்சீவின் பண்ணை வீட்டு வளாகத்தில் போடப்பட்டிருந்த பிரமாண்ட செட் தீப்பிடித்து எரிந்தது.

அதில் ரூ. 2 கோடிக்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்சூரன்ஸ் பணத்திற்காக ராம் சரண் தேஜா தான் செட்டிற்கு தீ வைத்ததாக வதந்தி பரவியது.
அந்த வதந்தி காற்று வாக்கில் ராம் சரண் காதுகளில் விழுந்துள்ளது. உடனே அவர் கோபம் அடைந்து கத்தினாராம். ரூ. 200 கோடிக்கும் மேல் செலவு செய்து படத்தை தயாரிக்கிறேன், கேவலம் ரூ. 2 கோடி இன்சூரன்ஸுக்காக செட்டை எரிப்பேனா என்று கொந்தளித்தாராம்.
இன்சூரன்ஸ் காசுக்காக ஆசைப்பட்டு செட்டை எரிக்கும் கேவலமான விஷயத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என்றாராம் ராம் சரண் தேஜா. சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகளை படமாக்கும் முன்பு தான் அந்த செட்டில் தீப்பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











