Don't Miss!
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- News நாளை லோக்சபா தேர்தல்.. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் நல்லா இருக்கேன்… விபத்து வதந்திக்கு விளக்கம் அளித்த கே.ஆர்.விஜயா
திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகை கே.ஆர்.விஜயா விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாக வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை தான் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார் கே.ஆர். விஜயா.
பழம்பெரும் நடிகை மனோராமா கடந்த சனிக்கிழமையன்று இரவு மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் ஞாயிறு மாலை நடைபெற்றது. திரையுலகினரும், சினிமா ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்திருந்த நிலையில் மகாளய அமாவாசை தினமான நேற்று வாட்ஸ்அப் மூலம் ஒரு வதந்தி பரவியது.
கேரளாவில் விபத்து ஏற்பட்டதாகவும், இதில் கே.ஆர் விஜயா உயிரிழந்து விட்டதாகவும் தகவல் பரவியதும் திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பலரும் கே.ஆர்.விஜயாவுடன் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.
அப்போது பேசிய கே.ஆர்.விஜயா, நான், இப்போது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசித்து வருகிறேன். எனக்கு விபத்து எதுவும் நடக்கவில்லை. நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். மகாளய அமாவாசை அன்று என்னை பற்றி வதந்தி பரவியதை திருஷ்டி கழிந்து விட்டதாக எடுத்துக்கொண்டேன். என் உடல் நலத்தில் அக்கறை கொண்டு விசாரித்ததற்காக நன்றி என்று கூறியுள்ளார்.