Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் குழுமத்தில் ஐடி ரெய்டு: ரூ.24 கோடி பணம்.. தங்க நகைகள் பறிமுதல்!
Recommended Video
சென்னை: பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவன அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் கணக்கில் வராத 24 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் எங்கேயும் காதல், தனி ஒருவன், அனேகன் உள்ளிட்ட ஏராளமான படங்களை கொடுத்த புரடெக்ஷன் நிறுவனம் ஏஜிஎஸ். இந்த நிறுவனம் கடைசியாக நடிகர் விஜயை வைத்து பிகில் படத்தை தயாரித்தது.
இந்தப் படத்தால் மிகப்பெரிய லாபம் பெற்றதாகவும் பிகில் படம், 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. அதே நேரத்தில் பிகில் திரைப்படம் நஷ்டம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் வரி ஏய்ப்பு புகாரில் சென்னை தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உட்பட ஏஜிஎஸ். நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் விஜயின் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவன அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் கணக்கில் வராத 24 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் கணக்கில் வராத தங்க நகைகளும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.