Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் குழுமத்தில் ஐடி ரெய்டு: ரூ.24 கோடி பணம்.. தங்க நகைகள் பறிமுதல்!
Recommended Video
சென்னை: பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவன அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் கணக்கில் வராத 24 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் எங்கேயும் காதல், தனி ஒருவன், அனேகன் உள்ளிட்ட ஏராளமான படங்களை கொடுத்த புரடெக்ஷன் நிறுவனம் ஏஜிஎஸ். இந்த நிறுவனம் கடைசியாக நடிகர் விஜயை வைத்து பிகில் படத்தை தயாரித்தது.
இந்தப் படத்தால் மிகப்பெரிய லாபம் பெற்றதாகவும் பிகில் படம், 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. அதே நேரத்தில் பிகில் திரைப்படம் நஷ்டம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் வரி ஏய்ப்பு புகாரில் சென்னை தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உட்பட ஏஜிஎஸ். நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் விஜயின் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவன அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் கணக்கில் வராத 24 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் கணக்கில் வராத தங்க நகைகளும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.