Don't Miss!
- Education அடேங்கப்பா...நீட் தேர்வு எழுத 23.82 லட்சம் பேர் விண்ணப்பம்...!!
- Finance ரஷ்யா-வுக்கு செக்.. இந்திய நிறுவனங்கள் எடுத்த முடிவால் புது சிக்கல்..!
- Technology ஹாலுக்கே 2 டிவி வாங்கலாம்.. டிஸ்கவுண்ட்டில் ரூ.14499 போதும்.. 40 இன்ச் டிவி மோட்டோ டிவி பெசல்-லெஸ் டிஸ்பிளே!
- News ஆம் ஆத்மிக்கு எதிராக.. பாஜக போட்டி போராட்டம்! கெஜ்ரிவால் பதவி விலக வலியுறுத்தல்! டெல்லியில் சலசலப்பு
- Automobiles லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்
- Lifestyle உலகத்தின் தலையெழுத்தையே மாற்றிய காகிதத்தை முதலில் கண்டுபிடித்த நாடு எது தெரியுமா? சத்தியமா இந்தியா இல்ல...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய தலைவலி.. பழைய அவமானத்தை மறக்காத முகமது ஷமி.. அதிரடி திருப்பம்
- Travel பெரிய நியூஸ் – இந்திய ரயில்வேயில் 75% வரை தள்ளுபடி கட்டணத்தில் டிக்கெட் புக் பண்ணலாம் தெரியுமா?
இந்த 'குயில்' இனி பாடாது: ஓய்வை அறிவித்தார் எஸ். ஜானகி
சென்னை: பிரபல பின்னணி பாடகி ஜானகி கடைசியாக ஒரு மலையாள தாலாட்டுப் பாடலுடன் தனது சுமார் 60 ஆண்டு காலை இசைப்பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி ஜானகிக்கு 78 வயதானாலும் அவரது குரல் இன்னும் இளமையாக உள்ளது. அவரது தாலாட்டுப் பாடல்களை கேட்டால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு கூட தூக்கம் வரும்.
அப்படிப்பட்ட தேன் குரல் அவருடையது.
விதியின் விளையாட்டு
1957ம் ஆண்டு வெளியான விதியின் விளையாட்டு படம் மூலம் பாடகியானவர் எஸ். ஜானகி. சுமார் 60 ஆண்டுகளாக பாடி வரும் அவர் 10 கல்பனகல் என்ற மலையாளப் படத்திற்காக ஒரு தாலாட்டுப் பாடலை பாடியுள்ளார்.
நிறைவு
மலையாள தாலாட்டுப் பாடல் தான் நான் பாடிய கடைசி பாட்டு. அதன் பிறகு நான் படங்களிலோ, நிகழ்ச்சிகளிலோ பாட மாட்டேன். எனக்கு வயதாகிவிட்டது. பல மொழிகளில் பாடிவிட்டேன். இனி பாடுவதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்று ஜானகி தெரிவித்துள்ளார்.
ஜானகி
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளவர் ஜானகி. அது ஏன் கடைசியாக மலையாள பாடல் என்று கேட்டதற்கு, நானாக தேர்வு செய்யவில்லை. அதுவாக நடந்துள்ளது. இசை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த வேளையில் என் மனதுக்கு நெருக்கமான தாலாட்டு பாடலே என்னை தேடி வந்துள்ளது என்கிறார் ஜானகி.
திருநாள்
ஜீவா, நயன்தாரா நடித்த திருநாள் படத்தில் வந்த தந்தையும் யாரோ என்ற பாடல் தான் ஜானகி கடைசியாக பாடிய தமிழ் பாடல் ஆகும். ஜானகி எஸ்.பி.பி. ஜோடிக் குரல் பிடிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. இந்நிலையில் ஜானகியின் ஓய்வு முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.