Don't Miss!
- Sports டபுள் ஹாட்ரிக் எடுத்தால் தான் வென்று இருக்க முடியும்! பிட்ச் மோசம் இல்ல-நாங்க தான்!சுப்மன் கில் கலகல
- Lifestyle கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- Automobiles குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- News ‛‛நீங்கள் தான் என் சொத்து’’.. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. குஷியில் தமிழக பாஜக
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது.. மற்றொரு அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை!
சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மற்றொரு அறிக்கை வெளியாகி உள்ளது.
Recommended Video
கடந்த வாரம் கொரோனா தொற்று தனக்கு பரவி இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்து இருந்தார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
இந்நிலையில், நேற்று எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், தனுஷ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய ரசிகர்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்தனர்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், பயப்பட தேவையில்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் நேற்று அறிவித்து இருந்தார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தைத் தொடர்ந்து அவரது மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று பரவியது.
இந்நிலையில், எம்.ஜி.எம் மருத்துவமனை தற்போது மற்றொரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
அதில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராகவே உள்ளது. செயற்கை சுவாச கருவிகளின் உதவியோடு, குணமாகி வருகிறார். அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் மனைவிக்கும் பரவியது கொரோனா தொற்று.. விரைவில் குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனை
40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, எத்தனையோ மக்களின் சோகத்தை போக்கிய எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராகி வரும் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அவர் குணமடையும் வரை தங்களின் பிரார்த்தனை தொடரும் என்றும் கூறி வருகின்றனர்.