Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
எஸ்.எஸ்.ஆரின் முதல் தமிழ்ப்படம்... பராசக்தி இல்லை !
சென்னை: லட்சிய நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர். அறிமுகமான படம் பராசக்தி தான் எனப் பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை, பராசக்திக்கு முன்பே பைத்தியக்காரன் என்ற படத்தின் மூலம் தான் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கியவர் எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப் படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவர் பழம் பெரும் நடிகராக மட்டுமின்றி, நீண்ட அரசியல் வரலாறு கொண்ட அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர்.
சமீபகாலமாக உடல்நலக் கோளாறால் அவதிப் பட்டு வந்த எஸ்.எஸ்.ஆர். இன்று காலமானார். அவருக்கு வயது 86.
இந்நிலையில், எஸ்.எஸ்.ஆரின் திரையுலகப் பிரவேசம் குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியாத தகவல் ஒன்று இருக்கிறது.
கலைஞரின் பராசக்தி...
திமுக தலைவர் கருணாநிதியின் கதைம் வசனம் எழுதிய பராசக்தி படத்தின் மூலமாக கடந்த 1952ம் ஆண்டு தமிழ் சினிமாவில் சிவாஜியுடன் சேர்ந்து அறிமுகமானவர் எஸ்.எஸ்.ஆர். எனக் கூறப்படுவதுண்டு.
சிவாஜின் அண்ணனாக...
அப்படத்தில் சிவாஜியின் அண்ணனாக, ஏழை மக்களின் வாழ்க்கைக்கு குரல் கொடுக்கும் தலைவனாக நடித்திருந்தார் எஸ்.எஸ்.ஆர்.
பைத்தியக்காரன் படம்...
ஆனால், பராசக்தி படம் வெளியாவதற்கு முன்னரே கடந்த 1947ம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் எஸ்.எஸ்.ஆர். அப்படத்தின் பெயர் பைத்தியக்காரன்.
எம்.ஜி.ஆர். நடித்த படம்...
எம்.ஜி.ஆர். ஒரு சில காட்சிகளில் தோன்றி நடித்த அத்திரைப்படத்தில் எஸ்.எஸ்.ஆரும் ஒரு சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
5 வருட இடைவெளி...
இப்படத்திற்குப் பிறகு நடிக்க பட வாய்ப்புகள் கிடைக்காததால்,கிட்டத்தட்ட 5 வருட இடைவெளிக்குப் பின்னர் தான் மீண்டும் பராசக்தி படம் மூலம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகராக அறிமுகமாகியுள்ளார் எஸ்.எஸ்.ஆர்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!