Don't Miss!
- News
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர் தண்ணீர் தொட்டியில் ஊழியர் மரணம்.. 7 நாட்களாக கிடந்த சடலம்
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
‘கைலாசாவில் பிரதமர் பதவி வேண்டும்’.. சைடு கேப்பில் நித்தியிடம் அப்ளிகேஷன் போட்ட பிரபல நடிகர்!
சென்னை: நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் தனக்கு பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் என நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வகையான பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி சாமியார் நித்யானந்தா. இவர் எங்கிருக்கிறார் என்பது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. ஆனால் தினம் தினம் புதுப்புது வீடியோக்களாக அப்லோட் செய்து போலீசை டென்ஷனாக்கிக் கொண்டிருக்கிறார்.
நித்யானந்தா தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாகவும், அதற்கு ஸ்ரீகைலாசா என பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஈகுவடார் நாட்டுக்கு அருகே தனித்தீவு ஒன்றில் அந்த நாடு இருப்பதாக பலரும் பேசி வருகிறார்கள்.
உடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லியான நிவேதா பெத்துராஜ்

நித்தியானந்தாவுக்கு ஆதரவு
இந்த சூழலில் நித்யானந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நடிகர் மற்றும் அரசியல்வாதி எஸ்.வி.சேகர், ஸ்ரீகைலாசா நாட்டின் பிரதமர் பதவியை தனக்கு தரவேண்டும் என கேட்டுள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனல் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நித்யானந்தாவுக்கும் தனக்குமான உறவு குறித்து பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

நித்தியுடனான உறவு
"சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது தந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது நித்யானந்தா எனது வீட்டிற்கு வந்து ஹீலிங் முறையில் அவரை குணப்படுத்தினார். அதனால் தான் அவர் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது.
|
இந்து மதத்தை விமர்சிக்கிறார்கள்
நித்யானந்தாவை அசிங்கமாக பேசுவதை மக்கள் நிறுத்த வேண்டும். நித்யானந்தா பல குழந்தைகளின் மூன்றாவது அறிவை திறந்துவைத்தவர். நித்யானந்தாவை வைத்து இந்து மதத்தை அசிங்கமாக விமர்சிக்கிறார்கள்.
இந்து நாடு
ஒரு இந்து நாடை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் ஒரு தீவை விலைக்கு வாங்கியிருக்கிறார் நித்யானந்தா. அவர் ஒன்றும் கறுப்பு பணத்தில் அந்த தீவை வாங்கவில்லை. ஒரு இந்து நாடு உருவாவதை தாங்க முடியாமல் தான் நித்யானந்தாவை அழிக்க பார்க்கிறார்கள்.

பிரதமர் பதவி
ஆனால் நித்யானந்தா நிச்சயம் ஸ்ரீ கைலாசா நாட்டை நிறுவுவார். அப்படி அவர் அந்த நாட்டை உருவாக்கும் போது, எனக்கு பிரதமர் பதவி கொடுத்தால் நானும் அங்கு செல்வேன். எனக்கு இங்கு குடும்பம் இருப்பதால், அங்கு அவ்வப்போது சென்றுவிட்டு வருவேன்", என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.