எஸ்3 பட ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்?: சூர்யா விளக்கம்
சென்னை: எஸ் 3 படம் தள்ளிப் போனது குறித்து சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ள எஸ் 3 படம் தள்ளித் தள்ளிப் போய் டிசம்பர் 23ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போடப்பட்டுள்ளது. எஸ் 3 படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது என்று கூறப்படுகிறது. பொங்கலுக்கு வரும் பைரவாவுடன் எஸ் 3 மோதுகிறது.
இது குறித்து சூர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கட்டுப்படுத்த முடியாத பல வெளிக்காரணங்களால் எஸ்3 படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பெரிய நன்மைக்காக என்று நம்பவும். உங்களின் ஆதரவு தேவை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











