Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்காக மாஸ் பிரார்த்தனை.. எஸ்.ஏ. சந்திரசேகர் உருக்கமான வீடியோ!
சென்னை: கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி உள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம் மீண்டும் வந்து மைக்கை பிடித்து பாடுவாரு என இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
நாளை மாலை 6 மணி முதல் 6.05 மணி வரை ஒட்டுமொத்த தமிழக மக்களும், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என வெறும் ஐந்தே ஐந்து நிமிடம் ஒருமித்த குரலாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இது தொடர்பாக தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில், இருப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், மருத்துவர்களையும் மிஞ்சிய சக்தி ஒன்று இருக்கிறது. அதுதான் இறை சக்தி, இறைவன். அவன் மீது நம்பிக்கை இருக்கிறது.
ஆத்தா மதுரை மீனாட்சியை மனசார வேண்டிக்கிறேன்.. எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைய நடிகர் சூரி பிரார்த்தனை
ஆயிரம் நிலவே வா என பாடி திரைத் துறைக்குள் அடியெடுத்து வைத்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், சீக்கிரம் குணமாகி மீண்டும் மைக்கை பிடித்து லட்சம் நிலவே வா என பாடுவார் என மிகவும் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
முன்னதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா, ஹாரிஷ் ஜெயராஜ், ஜி.வி. பிரகாஷ், தனுஷ் மற்றும் பல திரை நட்சத்திரங்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையை முன் வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.