Don't Miss!
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜய் மீது எஸ்ஏ சந்திரசேகர் கோபம்? நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார்!
சென்னை: ஒரு பக்கம் பிறந்த நாள் விழா திட்டமிட்டபடி நடக்காமல் போன கடுப்பு, அரசியல் நெருக்கடியில் மூட் அவுட்டிலிருக்கும் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் கடந்த சில தினங்களாக மனக்கசப்பு நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இதன் வெளிப்பாடாகத்தான், நேற்று நடந்த தலைவா பட இசை வெளியீட்டில் கூட பாதியிலேயே வெளியேறிவிட்டார் எஸ் ஏ சந்திரசேகரன் என்று முணுமுணுக்கிறார்கள்.
பிறந்த நாளுக்கு முன் நடக்கும் விழா என்பதால் தலைவா இசை வெளியீட்டில் பெரிதாக ஏதாவது பேசுவார் விஜய் என எதிர்ப்பார்த்துப் போன ரசிகர்கள், செய்தியாளர்களுக்கும் ஏமாற்றம்தான். விஜய் அப்படி எதுவும் பேசவில்லை.
தலைவா இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற எஸ் ஏ சந்திரசேகர், "தலைவா திரைப்படத்தின் கதை எனக்கே தெரியாது. நானும் உங்களைப் போலத்தான் படத்தைப் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்," என்று பேசிவிட்டு, விழா நடந்து கொண்டிருக்கும்போதே கிளம்பிவிட்டார். தொடர்ந்து பேச வந்த விஜய்யும், படம் நல்லா வந்திருக்கு, தியேட்டருக்குப் போய் பாருங்கள்," என்று கூறி முடித்துக் கொண்டார்.
விஜய்க்கு வரும் கதைகளை சந்திரசேகர்தான் கேட்டு தேர்ந்தெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தலைவா கதையை எஸ்ஏசியிடம் சொல்லவில்லையாம். விஜய்க்கும் எஸ்ஏசிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது.
பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் கேட்டதும் அலட்டிக்கொள்ளாமல் பாட்டு பாடுவது விஜய் வழக்கம். ஆனால் தலைவா விழாவில் ரசிகர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் பாடாமல் மைக்கை வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
அப்பாவுடன் கருத்து வேறுபாடு, பிறந்த விழா ரத்து கோபம் போன்ற காரணங்கள்தான் விஜய்யின் இந்த மூட் அவுட்டுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!