Don't Miss!
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- News ‛‛கடவுளே நான் ஜெயிக்கணும்’’.. ஓட்டுப்போட சென்றதும் இவிஎம் முன்பு தமிழிசை செய்ததை கவனீச்சிங்களா!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விஜய் மீது எஸ்ஏ சந்திரசேகர் கோபம்? நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார்!
சென்னை: ஒரு பக்கம் பிறந்த நாள் விழா திட்டமிட்டபடி நடக்காமல் போன கடுப்பு, அரசியல் நெருக்கடியில் மூட் அவுட்டிலிருக்கும் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் கடந்த சில தினங்களாக மனக்கசப்பு நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இதன் வெளிப்பாடாகத்தான், நேற்று நடந்த தலைவா பட இசை வெளியீட்டில் கூட பாதியிலேயே வெளியேறிவிட்டார் எஸ் ஏ சந்திரசேகரன் என்று முணுமுணுக்கிறார்கள்.
பிறந்த நாளுக்கு முன் நடக்கும் விழா என்பதால் தலைவா இசை வெளியீட்டில் பெரிதாக ஏதாவது பேசுவார் விஜய் என எதிர்ப்பார்த்துப் போன ரசிகர்கள், செய்தியாளர்களுக்கும் ஏமாற்றம்தான். விஜய் அப்படி எதுவும் பேசவில்லை.
தலைவா இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற எஸ் ஏ சந்திரசேகர், "தலைவா திரைப்படத்தின் கதை எனக்கே தெரியாது. நானும் உங்களைப் போலத்தான் படத்தைப் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்," என்று பேசிவிட்டு, விழா நடந்து கொண்டிருக்கும்போதே கிளம்பிவிட்டார். தொடர்ந்து பேச வந்த விஜய்யும், படம் நல்லா வந்திருக்கு, தியேட்டருக்குப் போய் பாருங்கள்," என்று கூறி முடித்துக் கொண்டார்.
விஜய்க்கு வரும் கதைகளை சந்திரசேகர்தான் கேட்டு தேர்ந்தெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தலைவா கதையை எஸ்ஏசியிடம் சொல்லவில்லையாம். விஜய்க்கும் எஸ்ஏசிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது.
பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் கேட்டதும் அலட்டிக்கொள்ளாமல் பாட்டு பாடுவது விஜய் வழக்கம். ஆனால் தலைவா விழாவில் ரசிகர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் பாடாமல் மைக்கை வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
அப்பாவுடன் கருத்து வேறுபாடு, பிறந்த விழா ரத்து கோபம் போன்ற காரணங்கள்தான் விஜய்யின் இந்த மூட் அவுட்டுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.