Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
விஜய் மீது எஸ்ஏ சந்திரசேகர் கோபம்? நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார்!
சென்னை: ஒரு பக்கம் பிறந்த நாள் விழா திட்டமிட்டபடி நடக்காமல் போன கடுப்பு, அரசியல் நெருக்கடியில் மூட் அவுட்டிலிருக்கும் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் கடந்த சில தினங்களாக மனக்கசப்பு நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இதன் வெளிப்பாடாகத்தான், நேற்று நடந்த தலைவா பட இசை வெளியீட்டில் கூட பாதியிலேயே வெளியேறிவிட்டார் எஸ் ஏ சந்திரசேகரன் என்று முணுமுணுக்கிறார்கள்.
பிறந்த நாளுக்கு முன் நடக்கும் விழா என்பதால் தலைவா இசை வெளியீட்டில் பெரிதாக ஏதாவது பேசுவார் விஜய் என எதிர்ப்பார்த்துப் போன ரசிகர்கள், செய்தியாளர்களுக்கும் ஏமாற்றம்தான். விஜய் அப்படி எதுவும் பேசவில்லை.
தலைவா இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற எஸ் ஏ சந்திரசேகர், "தலைவா திரைப்படத்தின் கதை எனக்கே தெரியாது. நானும் உங்களைப் போலத்தான் படத்தைப் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்," என்று பேசிவிட்டு, விழா நடந்து கொண்டிருக்கும்போதே கிளம்பிவிட்டார். தொடர்ந்து பேச வந்த விஜய்யும், படம் நல்லா வந்திருக்கு, தியேட்டருக்குப் போய் பாருங்கள்," என்று கூறி முடித்துக் கொண்டார்.
விஜய்க்கு வரும் கதைகளை சந்திரசேகர்தான் கேட்டு தேர்ந்தெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தலைவா கதையை எஸ்ஏசியிடம் சொல்லவில்லையாம். விஜய்க்கும் எஸ்ஏசிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது.
பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் கேட்டதும் அலட்டிக்கொள்ளாமல் பாட்டு பாடுவது விஜய் வழக்கம். ஆனால் தலைவா விழாவில் ரசிகர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் பாடாமல் மைக்கை வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
அப்பாவுடன் கருத்து வேறுபாடு, பிறந்த விழா ரத்து கோபம் போன்ற காரணங்கள்தான் விஜய்யின் இந்த மூட் அவுட்டுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.