Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள்!- போட்டுத் தாக்கும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்
இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் 'நையப்புடை'. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக வேடமேற்று நடிக்க அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
'நையப்புடை' படத்தின் அனுபவம் பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்பேசும் போது, "எனக்கு உழைப்பு தவிர வேறு எதுவும் தெரியாது. யாரையாவது நாம் விரும்பினால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். நான் 5 ஆண்டுகள் காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டவன். படப்பிடிப்புக்கு மும்பை போகும் போது பைவ் ஸ்டார் ஓட்டலில் தங்கியிருப்பேன். ஸ்டார் ஓட்டலில் நாம் சமைக்க அனுமதி இல்லை. எனவே பாத் ரூமில் உள்ள ப்ளக் பாயிண்டில் குக்கரை வைத்து என் மனைவி சமைத்துக் கொடுப்பார். யாரையாவது நாம் விரும்பினால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள்.
உண்மையாகக் காதலித்தால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். இப்போதெல்லாம் உண்மையாகக் காதலிப்பவர்கள் இருப்பதில்லை. மனைவியைப் போலவே நான் சினிமாவையும் நிஜமாகவே காதலிக்கிறேன். என்றும் காதலுக்கு தனி சக்தி உண்டு. காதலித்தால் ஒரு சக்தி வரும். அதனால்தான் இனி சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் படத்தில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வருகிறது.
எனக்கு உழைக்க மட்டுமே தெரியும். என் தயாரிப்பாளர்கள் சொல்வார்கள் 'மாடு மாதிரி உழைக்கிறானே' என்பார்கள். நான் பெரிய அறிவாளி இல்லை. எனக்கு 2 வரி கவிதை கூட எழுதத் தெரியாது. 4 வரி வசனம்கூட எழுதத் தெரியாது. இலக்கியம் படித்ததில்லை. இருந்தாலும் உழைப்பேன்.
இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள். கதையில்லாமல் படம் எடுக்கிறார்கள். அதுவும் ஓடுகிறது. எனக்கு 73 வயது ஆகிறது. இந்த இயக்குநருக்கு 19 வயதுதான் ஆகிறது. இந்தப் பையன் இயக்குநர் என்று படம் ஆரம்பித்ததும் 2 நாளில் ஓடிவிடலாம் என்று நினைத்தேன். இது சரிப்பட்டு வராது படத்தை நிறுத்தி விடலாம் என்றேன். தாணுதான் சமாதானப் படுத்தினார் 4 வதுநாள் எடிட் செய்து எடுத்ததைக் காட்டியதைப் பார்த்தவுடன்தான் நம்பிக்கை வந்தது. இன்றைய இளைஞர்கள் வேறு மாதிரி இருக்கிறார்கள். நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
பா.விஜய்யை என் இன்னொரு மகனாகவே பார்க்கிறேன். படத்தின் கதை எனக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தாலும், அவர் பெருந்தன்மையுடன் 'ஜெயிக்கிற படத்தில் நான் இருக்கிறேன் ' என்றார்.. இப்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷுடன் நடிக்கிறேன் தனுஷ் நடிப்பது தெரியாமல் நடிக்கிறார். அவரிடம் நிறைய கற்றுக்கொள்கிறேன்.இன்றைய இளைஞர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது,' என்றார்.
நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜீவன், தயாரிப்பாளர்கள் பி,டி .செல்வகுமார், காஸ்மோ சிவா ஆகியோரும் பேசினார்கள்.