கமிஷனர் அலுவலகத்தில் எஸ்ஏசி மனு - 'எங்களை நீக்கியது செல்லாது'!

கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணனையும் சந்தித்து பேசினார்கள்.
பின்னர் வெளியில் வந்த அவர்கள், நிருபர்களை சந்தித்தார்கள். அப்போது எஸ்ஏ சந்திரசேகரன் கூறுகையில், "தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நாங்கள். எங்கள் சங்கத்தில் 750 தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நான் 320 ஓட்டுகள் வாங்கி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன்.
எங்களை நீக்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இது விளையாட்டு சமாச்சாரம் அல்ல. 15 நாட்களுக்கு முன்பு நோட்டீசு கொடுத்துதான் யாரையும் நீக்க முடியும். சங்கத்தின் செயல்பாடுகள் நடக்க வேண்டும்.
அது குறித்து கமிஷனரிடம் பேசினோம். நாங்கள் பாதுகாப்பு கேட்கவில்லை. எங்களுக்குள் பகை இல்லை. எங்கள் பிரச்சினையை நீதிமன்றம் தீர்த்து வைக்கும்," என்றார்.
Comments


Click it and Unblock the Notifications