Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்
சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சூர்யாவுக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த அகரம் அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா கூறியதாவது,
ஆசிரியர்களோ, மாணவர்களோ புதிய கல்விக் கொள்கை குறித்து ஏன் கண்டு கொள்ளவில்லை. இது நம் வீட்டு குழந்தைகளின் கல்வியை மாற்றப் போகிறது. இந்த புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களும் உள்ளது, அச்சம் தரக்கூடிய விஷயங்களும் உள்ளது.
குறைவான ஆசிரியர்கள் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்திருப்பது சரி அன்று. அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்காமல் நுழைவுத் தேர்வு நடத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினார் சூர்யா.
சூர்யா எதுவும் தெரியாமல், புரியாமல் பேசுவதாக பாஜக மற்றும் அதிமுகவினர் தெரிவித்தனர். இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் மட்டும் அல்ல அஜித், விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், சிம்பு ரசிகர்களும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். எதையும் தெரியாமல் பேசவில்லை என்று சூர்யாவும் பதில் அளித்தார்.
சூர்யாவுக்கு உலக நாயகன் கமல் ஹாஸன் ஆதரவு தெரிவித்தார். மேலும் திரையுலகினர் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் சூர்யா குறித்து கூறியதாவது,
நல்ல கருத்துகளை பேசக் கூடாது. சுதந்திர நாட்டில் சுதந்திரம் இல்லாமல் உள்ளோம். சூர்யா விஷயத்திலும் அது தான் நடந்திருக்கிறது. இருப்பினும் சூர்யா போன்று அனைவரும் நல்ல கருத்துகளை பேச வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
ஏழை, எளிய மாணவ, மாணவிகளை படிக்க வைக்கும் சூர்யாவுக்கு புதிய கல்விக் கொள்கை பற்றி பேச முழு உரிமை உள்ளது. அவரை கேள்வி கேட்கும் சிலருக்கு தான் தாங்கள் எதை பற்றி பேசுகிறோம் என்றே தெரியவில்லை என சூர்யா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சூர்யாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.