Don't Miss!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- News பாமக டி-ஷர்ட் போட்ட 4 பேர்.. அம்பேத்கர் சிலை குண்டு வீச்சு விவகாரத்தில் வன்னி அரசு பரபரப்பு ட்வீட்!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழறிவு இல்லையாம்!- சொல்கிறார் தேவயானி வீட்டுக்காரர்!
யாரை யார் விமர்சிப்பது என்ற விவஸ்தைக்கெல்லாம் இன்றைக்கு இடமில்லாமல் போய்விட்டது.
தமிழை ஆஸ்கர் மேடையேற்றி, 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று சொன்ன உன்னத தமிழன் ஏ ஆர் ரஹ்மானை, வெற்று விளம்பரத்துக்காக ஒருவர் விமர்சித்திருக்கிறார். அவர்தான் தேவயானி கணவர் என்ற அடையாளத்தோடு உலாவரும் இயக்குநர் ராஜகுமாரன்.
திருமதி தமிழ் என்ற படத்தை மனைவி தேவயானி தயாரிக்க, ராஜகுமாரனே இயக்கி நடித்துள்ளார். இந்தப் பட ஸ்டில்களைப் பார்த்த அனைவருமே இன்ஸ்டன்டாக ராஜகுமாரனுக்கு பவுடர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துவிட, உடனே சோலார் ஸ்டார் என தனக்காக ஒரு புதுப் பட்டப் பெயரை உருவாக்கினார் ராஜகுமாரன்.
சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தேவயானி, "திருமதி தமிழ் திரைப்படத்தின் பாடல்களை வாங்க யாருமே முன்வரவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் பாடல்களைத் தான் வாங்குகிறார்கள்," என்றார் ஆதங்கத்துடன்.
அப்போது மனைவி தேவயானியின் கையிலிருந்து ஆக்ரோஷமாக மைக்கை பிடுங்கிய ராஜகுமாரன் "ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களுக்கு தமிழறிவே சுத்தமாக இல்லை (இளையராஜா போலவே, பல மெகா ஹிட் பாடல்களுக்கு முதல் அடியை அல்லது பல்லவியை எழுதியவர் ஏ ஆர் ரஹ்மான் என்பதெல்லாம் ராஜகுமாரனுக்கு எங்கே தெரியப் போகிறது!)
திருமதி தமிழ் படத்தின் பாடல்கள் அனைத்தும் இலக்கிய சுவை நிறைந்தவை. இத் திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க ஹாரிஸ், யுவன் ஷங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட எந்த இசையமைப்பாளருக்கும் தகுதி கிடையாது.
எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு மட்டும் தான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க தகுதி இருக்கிறது," என்றார்.
பிதாவே, தாம் செய்வது என்னவென்று தெரியாமல் இவர்கள் செய்யும் பாவங்களை மன்னியும்!