'சாமி 2' - சென்டிமென்டுக்காக ஒரு வேலை பார்க்கும் இயக்குநர் ஹரி!
Recommended Video

சென்னை : சூர்யா நடிக்க, 'சி 3' படத்தை இயக்கியதை அடுத்து விக்ரம், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் 'சாமி-2' படத்தை இயக்கி வருகிறார் ஹரி. கடந்த வருடம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முக்கால்வாசிக்கும் மேல் முடிவடைந்து விட்டது.
இன்னும் சில காட்சிகளும், மூன்று பாடல் காட்சிகளையும் படமாக்கினால் 'சாமி 2' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். இந்நிலையில் தமிழ் சினிமா ஸ்ட்ரைக் நடைபெற்று வருவதால் ஷூட்டிங்குக்கு இடைவெளி விழுந்துள்ளது.

ஹரி இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான 'சாமி' படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற 'திருநெல்வேலி அல்வாடா...' ஸ்டைலில் ஒரு குத்துப் பாடலை 'சாமி 2' படத்திலும் வைக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
'திருநெல்வேலி அல்வா டா...' பாடலை 'சாமி' படத்துக்காக படமாக்கிய அதே லொகேஷன்களிலேயே இந்தப்பாடலையும் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார் ஹரி. 'சாமி' படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் 'சாமி 2' படத்துக்கும் வெற்றி கிடைக்கும் என்கிற சென்டிமென்ட் காரணமாக இந்த ஐடியாவாம்.


Click it and Unblock the Notifications











