Don't Miss!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை: கோமாவுக்கு சென்ற பிரவீனின் மனைவி! ஷர்மி தற்கொலைக்கு யார் காரணம்?
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எஸ்.ஏ.சி. மீது அவமதிப்பு வழக்கு
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சந்திரசேகருக்கு நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தயாரிப்பாளர் குஞ்சுமோனின் மகன் எபி குஞ்சுமோன். இவர் சுவாசம் என்ற படத்தை தயாரித்து, நடித்து வந்தார். ஆனால் இப்படம் முழுமையாக வளராமல் பாதியில் நிற்கிறது.இந்த நிலையில், தனது சுவாசம் படத்தின் கதையை திருடி, எஸ்.ஏ.சந்திரசேகர் நெஞ்சிருக்கும் வரை (நரேன், தீபா நடித்த படம்) படத்தை எடுத்து விட்டார் என்று கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எபி.
வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர், ரூ. 25 லட்சம் பணத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறும், படத்தை வெளியிட தடை இல்லை என்றும் தீர்ப்பளித்தார். இதையடுத்து நெஞ்சிருக்கும் வரை படம் ரிலீஸானது. ஆனால், எஸ்.ஏ.சந்திரேசகர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி பணத்தை டெபாசிட் செய்யவில்லை.
இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் மீது உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார் எபி. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதாகர், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி சந்திரசேகருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.