Don't Miss!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- News பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை! சென்னை ஹைகோர்ட் அதிரடி! சரணடைகிறாரா ராஜேஷ் தாஸ்?
- Finance Adani: விதிமுறைகளை மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சவால்களை விரும்புபவர் என் மகன் விஜய்... - எஸ்ஏசி பெருமை
30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயக்கி வெளியிட்டு வெற்றி பெற்ற 'சட்டம் ஒரு இருட்டறை' படம் இப்போது அதே பெயரில் ரீமேக் ஆகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகர் தங்கையின் பேத்தியான சென்னை லயோலா கல்லூரி மாணவி சினேகா பிரிட்டோ இந்தப் படத்தை இயக்குகிறார்.
விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாக அரங்கில் நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது, "என் மகன் விஜய்யை ஒரு டாக்டராக்க ஆசைப்பட்டோம். ஆனால் அவர் நடிகராக விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாளைய தீர்ப்பு உள்பட 5 படங்களில் அவரை நாயகனாக நடிக்க வைத்தேன்.
அதன்பிறகு நடிப்புத் துறையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு அவரது சொந்த முயற்சியில் முன்னேறி இன்று இளைய தளபதியாக உருவாகி உள்ளார். சவால்களை விரும்புபவர் விஜய்.
பெற்றோர்கள் என்பவர்கள் வழிகாட்டிகள்தான். அதேபோல் மாணவர்களான நீங்கள் எந்த இடத்திற்கு வரவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பு நிச்சயம் உங்கள் கனவை நனவாக்கும்.
'நாளைய தீர்ப்பு' படம் வெளிவந்தபோது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன்தான் இந்த படத்தின் கதாநாயகன் என்று கூறினார்கள். இப்போது என்னை நடிகர் விஜய்யின் தந்தை என்று கூறுகிறார்கள். இந்த நிலையை ஒவ்வொரு தந்தைக்கும் மகன்கள் மகள்கள் உருவாக்கித் தரவேண்டும்," என்றார்.