எங்க தலய பார்த்தா எப்படி தெரியுது: அனுஷ்கா, கோஹ்லி மீது ரசிகர்கள் கோபம்
மும்பை: விராட் கோஹ்லி, அனுஷ்கா தங்களின் திருமணத்திற்கு தோணியை அழைக்கவில்லை என்ற தகவல் அறிந்து அவரின் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் வரும் 15ம் தேதி இத்தாலியில் உள்ள டஸ்கனி என்ற இடத்தில் இருக்கும் ரிசார்ட்டில் வைத்து திருமணம் நடக்க உள்ளதாம்.
இதை சம்பந்தப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலர் மட்டுமே
குறைவான பேர்களுக்கே திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்களாம். அழைப்பிதழ் இல்லாத யாரும் திருமண நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

யுவராஜ்
கிரிக்கெட் வீரர்களில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். மற்ற வீரர்கள் அனைவரும் இலங்கைக்கு எதிராக விளையாடிக் கொண்டிருப்பதால் அழைக்கவில்லையாம்.

ரசிகர்கள்
தோணியும் இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருவதால் அவரையும் கோஹ்லி, அனுஷ்கா அழைக்கவில்லையாம். அவர் விளையாடுகிறாரோ, இல்லையோ அது எப்படி எங்க தலய அழைக்காமல் இருக்கலாம் என்று ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

வரவேற்பு
திருமணம் இத்தாலியில் நடந்தாலும் வரும் 26ம் தேதி மும்பையில் உள்ள பெரிய ஹோட்டல் ஒன்றில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











