Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கலிகாலம், தூங்க முடியல, இதயம் வலிக்குது: கொந்தளிக்கும் காயத்ரி ரகுராம், டிடி, ராதிகா
சென்னை: நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானது குறித்து டிடி, ராதிகா, காயத்ரி ரகுராம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். இதில் தாய், இரண்டு குழந்தைகள் பலியாகினர். கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
வேதனை
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு குடும்பம் தீக்குளித்துள்ளது. தந்தையை தவிர தாயும், குழந்தைகளும் பலி. தீயை அணைக்க மண்ணை தவிர எதுவும் இல்லை. இதயம் வலிக்கிறது என்று ராதிகா சரத்குமார் ட்வீட்டியுள்ளார்.
|
தூக்கம்
அவர்கள் செய்யாத தவறுக்கு உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகள் அடைந்த வேதனையை நினைத்தால் தூங்க முடியவில்லை. நாம் தினமும் தோற்கிறோம் என்கிறார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி.
|
வருத்தம்
நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்தது குறித்து ராதிகா போட்ட ட்வீட்டை பார்த்த காயத்ரி ரகுராம் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
|
விசாகப்பட்டினம்
பட்டப்பகலில் விசாகப்பட்டினத்தில் 23 வயது வாலிபர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இந்த உலகம் எங்கே போகிறது? மக்கள் கடந்து சென்றுள்ளனர்- ஆட்டோ டிரைவர் அதை தடுக்காமல் வீடியோ எடுத்துள்ளார்.#Kaliyugam என்று கொந்தளித்துள்ளார் காயத்ரி.