Don't Miss!
- Finance HDFC வங்கி-யின் இன்ப அதிர்ச்சி.. லாபம், வருவாய் உடன் டிவிடெண்ட் அறிவிப்பு.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கலிகாலம், தூங்க முடியல, இதயம் வலிக்குது: கொந்தளிக்கும் காயத்ரி ரகுராம், டிடி, ராதிகா
சென்னை: நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானது குறித்து டிடி, ராதிகா, காயத்ரி ரகுராம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். இதில் தாய், இரண்டு குழந்தைகள் பலியாகினர். கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
வேதனை
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு குடும்பம் தீக்குளித்துள்ளது. தந்தையை தவிர தாயும், குழந்தைகளும் பலி. தீயை அணைக்க மண்ணை தவிர எதுவும் இல்லை. இதயம் வலிக்கிறது என்று ராதிகா சரத்குமார் ட்வீட்டியுள்ளார்.
|
தூக்கம்
அவர்கள் செய்யாத தவறுக்கு உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகள் அடைந்த வேதனையை நினைத்தால் தூங்க முடியவில்லை. நாம் தினமும் தோற்கிறோம் என்கிறார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி.
|
வருத்தம்
நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்தது குறித்து ராதிகா போட்ட ட்வீட்டை பார்த்த காயத்ரி ரகுராம் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
|
விசாகப்பட்டினம்
பட்டப்பகலில் விசாகப்பட்டினத்தில் 23 வயது வாலிபர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இந்த உலகம் எங்கே போகிறது? மக்கள் கடந்து சென்றுள்ளனர்- ஆட்டோ டிரைவர் அதை தடுக்காமல் வீடியோ எடுத்துள்ளார்.#Kaliyugam என்று கொந்தளித்துள்ளார் காயத்ரி.