Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சகாயம் ஐ.ஏ.எஸ்ஸையும் விட்டு வைக்காத 'விசாரணை'
சென்னை: காவல் துறையின் விசாரணை முறைகளை மாற்றியமைக்கக் கூடிய சட்ட திருத்தங்களை உடனடியாக கொண்டு வரவேண்டும் என்று விசாரணை படத்தைப் பார்த்த பின்னர் சகாயம் ஐ.ஏ.எஸ் கூறியிருக்கிறார்.
நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் விசாரணை. பிரபல எழுத்தாளர் எம்.சந்திரசேகரின் லாக் - அப் நாவலை அடிப்படையாக வைத்து விசாரணை உருவாகி இருக்கிறது.
அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசைமயமைத்து இருக்கிறார்.
வெளியாகும் முன்பே பல்வேறு விருதுகளையும் விசாரணை வென்றிருப்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது.
மேலும் நடிகர் கமல்ஹாசன், ரஜினி, இயக்குநர் மணிரத்னம், பிரியதர்ஷன் ஆகியோர் இப்படத்தைப் பார்த்து தங்களது பாராட்டுகளை வெற்றிமாறன் குழுவினருக்கு தெரிவித்துள்ளனர்.
This is what Sagayam IAS had to say after watching #Visaaranai; film in cinemas from tomorrow (Feb 5th). pic.twitter.com/LX5cdgGUaD
— Wunderbar Films (@WunderbarFilms_) February 3, 2016
இந்நிலையில் நேற்று இப்படத்தைப் பார்த்த சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் "காவல் துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரம்பற்ற அதிகாரம் சனநாயகத்துக்கு எதிரானது.
காவல் விசாரணையில் அத்துமீறல்களை மட்டுப்படுத்தும் சீர்திருத்த சட்டங்களே உடனடியாக நமது நாட்டிற்கு தேவை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது சகாயம் ஐ.ஏ.எஸ்ஸின் இந்த வார்த்தைகளை விளம்பர வடிவில் படக்குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர்.
நாளை உலகம் முழுவதும் வெளியாகும் விசாரணை பெங்களூர் நாட்கள் மற்றும் சாஹசம் என்னும் வீர செயல் ஆகிய படங்களுக்கு பலத்த போட்டியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிமாறனின் விசாரணை தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!