சிவகார்த்திகேயன் மாதிரி யாராலும் முடியாது: சமந்தா
Recommended Video

சென்னை: நடிப்பால் தன்னை ஒருவர் இம்பிரஸ் செய்துவிட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் பிசியான நடிகையாக உள்ளார் சமந்தா. அவர் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்த ரங்கஸ்தலம் தெலுங்கு படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.
சமந்தாவின் படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது இது 8வது முறையாகும்.

சமந்தா
சமந்தா ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் நேற்று சாட் செய்தார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒருவர் சிவகார்த்திகேயன் பற்றி கேள்வி எழுப்பினார்.
ஜாலி
சிவகார்த்திகேயனுடன் வேலை பார்த்தது செம ஜாலி. அவருடைய காமிக் டைமிங் சூப்பர் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
நாள்
உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சிறந்த நாள் எது என்ற கேள்விக்கு சமந்தா, எனக்கு திருமணமான நாள் என்று பதில் அளித்துள்ளார் சமந்தா.
வாய்ப்பு
வாய்ப்பு கிடைத்தால் மலையாள படத்தில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா, கண்டிப்பாக நடிப்பேன், நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
நடிப்பு
நடிப்பால் உங்களை அண்மையில் அசத்திய நடிகை அல்லது நடிகர் என்ற கேள்விக்கு சாய் பல்லவி என்று பதில் அளித்துள்ளார் சமந்தா.


Click it and Unblock the Notifications











