சாய் பல்லவியின் விராட பருவம் OTT ரிலிஸ் இல்லை - இயக்குனர் உறுதி
ஹைதராபாத்: ராணா, சாய் பல்லவி நடிப்பில் தயாராகியுள்ள தெலுங்கு திரைப்படம் விராட பருவம்.
சுரேஷ் பாபு & சுதாகர் செருக்குரி தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் வேணு உடுகுலா இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு சுரேஷ் பாபிலி இசையமையத்துள்ளார். திவாகர் மணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தயாரிப்பு நிறுவனங்கள்
கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் நிலையில் பல திரைப்படங்கள் பின் வாங்க தொடங்கியுள்ளன. கொரோனா இரண்டாம் அலையின் விளைவாக மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தயாரிப்பு நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகிறது.

ரசிகர்கள் திருப்தி
ஒரு புறம் திரையரங்குகள் மூடப்பட, தயாரிப்பு நிறுவனங்கள் படங்களை OTT க்கு கைமாற்றி வருகின்றனர். ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் பல திரைப்படங்கள் இவ்வேளையில் OTT யிலே வெளிவந்து விடுகின்றன. தற்போது உள்ள சூழலுக்கு அது சரியாகவும் உள்ளது.

தள்ளி போடப்பட்டுள்ளது
இந்நிலையில் ராணா, சாய் பல்லவி நடித்துள்ள விராட பருவம் படத்தின் ரிலிஸ் தள்ளி போடப்பட்டுள்ளது. இவர்களுடன் இந்த படத்தில் பிரியாமணி, நந்திதா தாஸ், ஈஸ்வரி ராவ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் சாய் பல்லவி நக்ஸலைட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Recommended Video

ஒத்தி வைத்துள்ளனர்
தற்போது உள்ள சூழ்நிலை கருதி கடந்த மாதம் வெளியாக வேண்டிய இந்த படத்தை படக்குழு ஒத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் படம் OTT க்கு நல்ல விலைக்கு கைமாற உள்ளதாக சில தகவல்கள் வந்த நிலையில் படத்தின் இயக்குனர் வேணு உடுகுலா நிலைமை சரியானதும் படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என உறுதியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











