Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தொடரும் ஜெய்பீம் பிரச்சனை.. சூர்யா, ஜோதிகாவுக்கு திடீர் சிக்கல்.. மொத்த வழக்கு விபரம் இதோ!
சென்னை: சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் வன்னியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக பாமகவினர் மற்றும் வன்னிய சங்கங்களை சேர்ந்தவர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ருத்ர வன்னியர் சேனாவை சேர்ந்த சந்தோஷ் நாயகர் என்பவர் ஜெய்பீம் படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஐதராபாத்தில் துவங்கிய தளபதி 66 சூட்டிங்... 22 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்!
கொல்லும் அரக்கனாக
மத நம்பிக்கையையும், புனித வழிபாட்டு அடையாளங்களையும், சமாதி வைத்து தெய்வமாக வணங்கும் தெய்வத்திரு "குரு" என்பவரை பழங்குடி மக்களை வதைத்துக் கொல்லும் அரக்கனாக ஜெய்பீம் சினிமாவில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வன்னிய குல சாதியினர் ST சாதியினரை கொடுமை செய்வதாக காட்சிப்படுத்தி உள்ளதாக தனது நண்பர்கள் தன்னிடம் கூறும் போது அவமான மடைந்தேன் என சந்தோஷ் நாயகர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தோணிசாமி எப்படி குருவானார்
இந்த படத்தில் முதன்மை வில்லனாகக் காட்டப்படும் துணை ஆய்வாளரின் அசல்பெயர் அந்தோணிசாமி என்பதாகும். இவர் பிசி வகுப்பைச் சேர்ந்தவர். ஆனால், வன்னியர்களை குற்றவாளிகளாக காட்சிப்படுத்த வேண்டும் என்கிற தவறான நோக்கத்தில் அந்தோணிசாமி என்கிற பெயரை மாற்றி குருமூர்த்தி என வைத்தனர்.
அக்கினி குண்டம்
எஸ்.ஐ. குருமூர்த்தி வீட்டில் உள்ள காலண்டரில் அக்கினி குண்டம் படத்தையும் காட்சி படுத்தி இருந்தனர். மேலும், ஊர் பஞ்சாயத்து தலைவராக குணசேகரன் என்ற ஒரு பாத்திரத்தை வைத்து "உங்க 4 வீடுகளையும் கொளுத்தி விடுவேன்" என்ற வசனத்தையும் வைத்து காட்சிப்படுத்தி உள்ளனர் என படம் முழுக்க அடுக்கடுக்கடுக்காக வன்னியர்களை வில்லன்களாக காட்சிப்படுத்தும் நோக்கிலேயே இயக்குநர் இந்த படத்தை உருவாக்கி உள்ளார் என மொத்தம் 22 பாயிண்ட்டுகளை அடுக்கி அவர் மனு அளித்துள்ளார்.
Recommended Video
நீதிமன்றம் உத்தரவு
இந்த மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜோதிகா, சூர்யா, இயக்குநர் ஞானவேல்ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக 2டி நிறுவனத்துக்கும் நடிகர் சூர்யாவின் குடும்பத்துக்கும் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.
மீண்டும் அதே இயக்குநருடன்
இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு அரசியல் ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் மிகுந்த எதிர்ப்புகள் வந்துள்ள நிலையில், அடுத்ததாக மீண்டும் டி.ஜே. ஞானவேல் உடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் சூர்யா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
-
2வது திருமணம் செய்துக் கொண்ட அதிதி ராவ்.. சித்தார்த்துடன் தெலங்கானா கோயிலில் ரகசிய கல்யாணம்?
-
Maniratnam's Goat Life Review: எப்படி இது சாத்தியமாச்சு.. ஆடுஜீவிதம் படத்திற்கு மணிரத்னம் விமர்சனம்!