Don't Miss!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஆதிபுருஷில் நான்...கேரக்டரை விளக்கிய சைஃப் அலிகான்
மும்பை : சமீபத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படங்களில் ஒன்று ஆதிபுருஷ். ஓம் ரவுத் இயக்கும் இந்த படம் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் ஹைலைட்டாக முக்கிய வில்லனான ராவணன் வேடத்தில் சைஃப் அலிகான் நடிக்கிறார். இது ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றாலும், படத்தில் தனது கேரக்டர் பற்றிய வெளிப்படையாக பேசி உள்ளார் சைஃப் அலிகான்.
இது பற்றி அவர் கூறுகையில், ஓம் ரவுத் என்னை தற்போது இருப்பதை விட பெரிய ஆளாக்க போகிறார். அது என்னை இப்போதிருப்பதை விட பெரிய இடத்திற்கு கொண்டு போகும் என நினைக்கிறேன். இதில் சில தந்திரங்களும் கையாளப்பட்டுள்ளது. ஆனால் நிறைய விஷயங்கள் உண்மையானவை.
அரசியலை தூக்கி எறிந்து விட்டு கலை பயணத்தை தொடருங்கள்.. கமல்ஹாசனுக்கு பிரபல இயக்குநர் அட்வைஸ்!
ஒரு குறிப்பிட்ட கேரக்டராகவே நாங்கள் மாற வேண்டும் என்பதற்காக எங்களுக்கு கடினமாக பயிற்சிகளை அளிக்க நினைக்கிறார் டைரக்டர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ராவணன் இந்தியாவின் சாத்தான். கொடூரமான அரசன். அவருக்கு தனிப்பயிற்சி அளிக்க என்ன இருக்கிறது என நினைத்தேன்.
ஆனால் அவர் மிக வலிமையானவர். ஹீரோவிற்கு அவரை வீழ்த்த அதிக முயற்சிகள் தேவைப்பட்டுள்ளது. அவ்வளவு பலமாக இருந்ததால் தான் ராவணன், பிரம்மாண்ட ஆடைகள் அணிந்து, நிறைய ஆயதங்கள் வைத்துள்ளார். அவருக்கு மிகப் பெரிய அறிவும், சக்தியும் கிடைத்துள்ளன. அவரிடம் உள்ள மூர்க்கதனமான குணங்கள் பற்றிய டைரக்டர் என்னிடம் விளக்கினார்.
அவர் எனக்கு விளக்கிய விதம் அபாரமானது. ஓம், பார்ப்பதற்கு ஓரு மாணவரை போல் இரந்தாலும், மிகச் சிறந்த டைரக்டர். அத்தனை விஷயங்களை பற்றியும் அவர் தெளிவாக தெரிந்து வைத்துள்ளார். அதனால் என் கேரக்டர் உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களையும் மிக நுணுக்கமாக வடிவமைத்து வருகிறார் என்றார்.