Don't Miss!
- News எங்க ஏஜெண்டை துரத்திட்டு "கள்ள ஓட்டு" போட்டிருக்காங்க.. மறு வாக்குப்பதிவு தேவை: தமிழிசை பரபர புகார்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கண்ணு பட்டுடும்ல: ஹீரோவை திட்டிய நடிகை
மும்பை: மகன் தைமூர் அலி கானின் புகைப்படத்தை வெளியிட்டதற்காக நடிகை கரீனா கபூர் கோபம் அடைந்தார் என பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மனைவியும், நடிகையுமான கரீனா கபூர் கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தைமூர் அலி கான் என பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் சயிப் தைமூரின் புகைப்படத்தை தனது வாட்ஸ்ஆப் டிபியாக வைக்க அது அனைவருக்கும் கிடைத்துவிட்டது. இது குறித்து சயிப் கூறுகையில்,
கரீனா
தைமூரின் புகைப்படம் வெளியானதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் கரீனாவுக்கு தான் பிடிக்கவில்லை. மகனின் புகைப்படத்தை ஏன் வெளியிட்டீர்கள் என்று கோபப்ட்டார்.
தைமூர்
குழந்தையின் புகைப்படம் வெளியானால் அதை பார்த்து கண் பட்டுவிடும் என்று கரீனா கூறினார். கண் பட்டிருந்தால் இந்நேரம் கரீனா மருத்துவமனையில் அல்லவா இருந்திருக்க வேண்டும்.
கண்
குழந்தைக்கு கண் படுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் யாருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்யவில்லை. வாட்ஸ்ஆப் டிபியாக போட அது அப்படியே பரவிவிட்டது. பரவாயில்லை.
மகன்
தைமூரை மறைத்து மறைத்து வளர்க்க விரும்பவில்லை. தைமூர் ஏற்கனவே பிரபலமாகிவிட்டார். தலைக்கனம் இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என தைமூருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என சயிப் தெரிவித்துள்ளார்.
-
Ajith Kumar: தலன்னு கத்திய ரசிகர்கள்.. காதை பொத்திக்கொண்ட அஜித்.. ஓட்டுப்போட்ட போது நடந்த சம்பவம்!
-
தப்பு தப்பா வீடியோ போடுறாங்க?.. ரக்ஷனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு.. ஓபனாக பேசிய ஜாக்குலின்!
-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!