Salaar Box Office Day 3: பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடும் சலார்... 400 கோடி வசூலை கடந்ததா?

சென்னை: பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள சலார் திரைப்படம் கடந்த வாரம் 22ம் தேதி வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம், வசூலில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தாண்டின் மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை சலார் முறியடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சலார் 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ்

பான் இந்தியா மாஸ் ஹீரோ பிரபாஸுக்கு சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளது சலார் திரைப்படம். பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். இரண்டு உயிர் நண்பர்கள் பரம விரோதிகளாக மாறுவது தான் இந்தப் படத்தின் கதை. அதனை பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல்.

 Salaar Box Office Day 3: Prabhas starrer Salaar crossed Rs 400 crore collection in three days

சலார் படத்தின் மூலம் பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணி முதன்முறையாக இணைந்தது. உக்ரம், கேஜிஎஃப் படங்களுக்குப் பின்னர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலாருக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதே எதிர்பார்ப்புடன் பிரபாஸ் ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். பாகுபலிக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த படங்கள் எதுவுமே அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. இதனால் மொத்த நம்பிக்கையுடன் சலார் படத்தில் நடித்திருந்தார் பிரபாஸ்.

அதற்கு பலன் சேர்த்துள்ளது சலார் திரைப்படம். பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியானது சலார். முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்ததால், 178 கோடி ரூபாய் வசூலித்து இந்தாண்டின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் மாஸ் காட்டியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் 117 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆகமொத்தம் முதல் இரண்டு நாட்களில் 295 கோடி ரூபாய் வசூல் என்ற இமாலய சாதனையை படைத்தது. ஷாருக்கானின் பதான், ஜவான், விஜய்யின் லியோ படங்கள் தான் 2023ல் முதல் மூன்று நாட்களில் அதிகம் வசூலித்த படங்கள் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறி வந்தன. அது தற்போது சலார் படத்தால் பிரேக் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மூன்றாவது நாளான நேற்றும், சலார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், சலார் படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதியுள்ளது. இதன் காரணமாகவே நேற்றும் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக கலெக்‌ஷன் செய்துள்ளது. அதன்படி முதல் மூன்று நாட்களில் சலார் வசூல் 400 கோடி ரூபாயை கடந்துள்ளது. இதனால் பிரபாஸ் உட்பட சலார் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. அதேநேரம் இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. மேலும் கேஜிஎஃப் படங்களை விட சுமார் என்றே ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும் ஷாருக்கானின் டங்கி படத்தை விட சலாருக்கு தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் சலார் வசூல் நாளை வரை உச்சம் தொடும் என சொல்லப்படுகிறது. அதேபோல், 10 நாட்களுக்குள் 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கானின் டங்கி 4 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X