Don't Miss!
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இது ஒரு நல்ல கேள்வி: செய்தியாளர்களுக்கு அல்வா கொடுத்த சல்மான் கான்
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராய் பச்சன் பற்றி கேட்டதற்கு கைதட்டிவிட்டு சென்றுவிட்டார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வாழ்வில் வந்து செல்கின்ற காதலிகளின் எண்ணிக்கை ஏராளம். சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தது அனைவருக்கும் தெரியும். ஐஸ் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டார்.
இருப்பினும் இன்னும் சல்மான் கானிடம் ஐஸ் பற்றி கேட்கப்படுகிறது.
பிக் பாஸ்
பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவின் 9வது சீசனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் சல்மான் கான் கலந்து கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய் தனது ஐஸ்பா படத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளம்பரம் செய்வாரா என்று சல்மானிடம் கேட்கப்பட்டது. சல்மான் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
கைதட்டல்
பி.ஆர். என்னிடம் இருந்து மைக்கை திரும்பப் பெறும் முன்பு இந்த கேள்வியை கடைசியாக கேட்டிருக்க வேண்டும். எமோஷனல் கேள்வியை கேட்டுள்ளீர்கள். கைதட்டல்கள் என்று கூறி கையைதட்டிவிட்டு டாட்டா காட்டிவிட்டார் சல்மான்.
சல்மான் கான்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனை அவர் நடத்துவார், இவர் நடத்துவார் என்று பலரின் பெயர் அடிபட்டது. இறுதியில் நிகழ்ச்சியை நடத்தப் போவது சல்மான் கான் தான், வேறும் யாரும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.