ஐட்டம் நடிகையை பார்த்து கொந்தளித்த சல்மான்: சுற்றி வளைத்த பாடிகார்டுகள்
மும்பை: நடிகை கரீனா கபூர் அளித்த பார்ட்டியில் நடிகை மலாய்க்கா அரோரா கானை பார்த்ததும் சல்மான் கானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துள்ளது.
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு பார்ட்டி கொடுத்தார். பார்ட்டிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என அவர் சல்மான் கானிடம் தெரிவித்திருந்தார்.
கரீனாவின் பேச்சை தட்டாமல் சல்மான் பார்ட்டிக்கு வந்தார்.

மலாய்க்கா அரோரா கான்
பார்ட்டிக்கு ஐட்டம் பாடல்களுக்கு டான்ஸ் ஆடும் நடிகை மலாய்க்கா அரோரா கானும் வந்திருந்தார். மலாய்க்காவும் அவரது தங்கை அம்ரிதாவும் கரீனாவின் நெருங்கிய தோழிகள் ஆவர்.

சல்மான்
மலாய்க்கா அரோரா கானை பார்த்ததும் சல்மான் கான் கோபத்தில் கொந்தளித்தார். ஏதோ வாய்க்குள்ளேயே முணுமுணுத்தார். இதை பார்த்த சல்மான் கானின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள் அவரை சுற்றி வளைத்து மலாய்க்கா அருகில் போகாதபடி பார்த்துக் கொண்டனர்.

தம்பி பொண்டாட்டி
மலாய்க்கா அரோரா கான் சல்மான் கான் தம்பி அர்பாஸ் கானின் மனைவி. தற்போது அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள். விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளனர்.

சமாதானம்
அர்பாஸை பிரிய வேண்டாம் என்று சல்மான் எவ்வளவோ கூறியும் மலாய்க்கா கேட்கவில்லையாம். இதனால் தான் சல்மானுக்கு மலாய்க்காவை பார்த்ததும் கோபம் வந்துள்ளது.

கண்டும் காணாமலும்
கரீனாவின் பார்ட்டியில் சல்மான் மலாய்க்காவை கண்டும் காணாதது போன்று நடந்துள்ளார். சல்மானின் கோபம் பற்றி அறிந்த மலாய்க்கா அவர் இருந்த பக்கமே செல்லவில்லையாம்.


Click it and Unblock the Notifications











