Don't Miss!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஐட்டம் நடிகையை பார்த்து கொந்தளித்த சல்மான்: சுற்றி வளைத்த பாடிகார்டுகள்
மும்பை: நடிகை கரீனா கபூர் அளித்த பார்ட்டியில் நடிகை மலாய்க்கா அரோரா கானை பார்த்ததும் சல்மான் கானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துள்ளது.
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு பார்ட்டி கொடுத்தார். பார்ட்டிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என அவர் சல்மான் கானிடம் தெரிவித்திருந்தார்.
கரீனாவின் பேச்சை தட்டாமல் சல்மான் பார்ட்டிக்கு வந்தார்.
மலாய்க்கா அரோரா கான்
பார்ட்டிக்கு ஐட்டம் பாடல்களுக்கு டான்ஸ் ஆடும் நடிகை மலாய்க்கா அரோரா கானும் வந்திருந்தார். மலாய்க்காவும் அவரது தங்கை அம்ரிதாவும் கரீனாவின் நெருங்கிய தோழிகள் ஆவர்.
சல்மான்
மலாய்க்கா அரோரா கானை பார்த்ததும் சல்மான் கான் கோபத்தில் கொந்தளித்தார். ஏதோ வாய்க்குள்ளேயே முணுமுணுத்தார். இதை பார்த்த சல்மான் கானின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள் அவரை சுற்றி வளைத்து மலாய்க்கா அருகில் போகாதபடி பார்த்துக் கொண்டனர்.
தம்பி பொண்டாட்டி
மலாய்க்கா அரோரா கான் சல்மான் கான் தம்பி அர்பாஸ் கானின் மனைவி. தற்போது அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள். விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளனர்.
சமாதானம்
அர்பாஸை பிரிய வேண்டாம் என்று சல்மான் எவ்வளவோ கூறியும் மலாய்க்கா கேட்கவில்லையாம். இதனால் தான் சல்மானுக்கு மலாய்க்காவை பார்த்ததும் கோபம் வந்துள்ளது.
கண்டும் காணாமலும்
கரீனாவின் பார்ட்டியில் சல்மான் மலாய்க்காவை கண்டும் காணாதது போன்று நடந்துள்ளார். சல்மானின் கோபம் பற்றி அறிந்த மலாய்க்கா அவர் இருந்த பக்கமே செல்லவில்லையாம்.