Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கணபதி பூஜை: சல்மான் தங்கை வீட்டில் ஒன்று கூடிய மாஜி காதலிகள்
மும்பை: சல்மான் கானின் முன்னாள் காதலியரான காத்ரீனா கைப், சங்கீதா பிஜ்லானி ஆகியோர் சல்மானின் தங்கை அல்விராவின் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டு நட்புடன் உறவாடியது அனைவரையும் கவர்ந்தது.
சல்மானிடம் இவர்கள் ஒரு காலத்தில் நெருக்கத்துடன் நட்பு பாராட்டியவர்கள் ஆவர்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி அல்விரா ஏற்பாடு செய்திருந்த விழாவில் இவர்களும் கலந்து கொண்டனர்.
அஸார் மனைவி சங்கீதா
சங்கீதா பிஜ்லானி ஒரு காலத்தில் சல்மானுடன் மிகவும்நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர். இப்போது அஸாருதீனின் மனைவியாக இருக்கிறார்.
காத்ரீனா கைப்
அதேபோல ரொம்ப காலமாக சல்மானுடன் நெருக்கமாக இருந்தவர் காத்ரீனா கைப். கிட்டத்தட்ட காத்ரீனாவின் காட்பாதர் போல இருந்தார் சல்மான். ஆனால் இப்போது இருவரும் ஆளுக்கொரு பாதையில் போக ஆரம்பித்து விட்டனர்.
கட்டிப் பிடித்து அன்பு
அல்விராவின் வீட்டுக்கு இருவரும் வந்தபோது சினேகத்துடன் பழகிக் கொண்டனராம். ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து பாச மழை பொழிந்தனராம், வாழ்த்திக் கொண்டனராம்.
தனியாக உட்கார்ந்து பேச்சு
பின்னர் இருவரும் அமர்ந்து ரொம்பநேரம் பேசியும் கொண்டனராம். பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டுச் சொல்கிறார்கள்.
நல்ல நட்புதான்
இருவரும் ஒரு காலத்தில் தனித் தனியாக சல்மானுடன் நெருக்கமானவர்களாக இருந்தாலும் கூட பார்த்ததும் முறைத்துக் கொள்ளாமல் நட்போடு பழகியது அத்தனை பேருக்கும் ஆச்சரியமாக இருக்கிறதாம்.