Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கணபதி பூஜை: சல்மான் தங்கை வீட்டில் ஒன்று கூடிய மாஜி காதலிகள்
மும்பை: சல்மான் கானின் முன்னாள் காதலியரான காத்ரீனா கைப், சங்கீதா பிஜ்லானி ஆகியோர் சல்மானின் தங்கை அல்விராவின் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டு நட்புடன் உறவாடியது அனைவரையும் கவர்ந்தது.
சல்மானிடம் இவர்கள் ஒரு காலத்தில் நெருக்கத்துடன் நட்பு பாராட்டியவர்கள் ஆவர்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி அல்விரா ஏற்பாடு செய்திருந்த விழாவில் இவர்களும் கலந்து கொண்டனர்.
அஸார் மனைவி சங்கீதா
சங்கீதா பிஜ்லானி ஒரு காலத்தில் சல்மானுடன் மிகவும்நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர். இப்போது அஸாருதீனின் மனைவியாக இருக்கிறார்.
காத்ரீனா கைப்
அதேபோல ரொம்ப காலமாக சல்மானுடன் நெருக்கமாக இருந்தவர் காத்ரீனா கைப். கிட்டத்தட்ட காத்ரீனாவின் காட்பாதர் போல இருந்தார் சல்மான். ஆனால் இப்போது இருவரும் ஆளுக்கொரு பாதையில் போக ஆரம்பித்து விட்டனர்.
கட்டிப் பிடித்து அன்பு
அல்விராவின் வீட்டுக்கு இருவரும் வந்தபோது சினேகத்துடன் பழகிக் கொண்டனராம். ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து பாச மழை பொழிந்தனராம், வாழ்த்திக் கொண்டனராம்.
தனியாக உட்கார்ந்து பேச்சு
பின்னர் இருவரும் அமர்ந்து ரொம்பநேரம் பேசியும் கொண்டனராம். பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டுச் சொல்கிறார்கள்.
நல்ல நட்புதான்
இருவரும் ஒரு காலத்தில் தனித் தனியாக சல்மானுடன் நெருக்கமானவர்களாக இருந்தாலும் கூட பார்த்ததும் முறைத்துக் கொள்ளாமல் நட்போடு பழகியது அத்தனை பேருக்கும் ஆச்சரியமாக இருக்கிறதாம்.