Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஒவ்வொரு பாடலுக்காகவும்.. எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய சல்மான் கான் பிரார்த்தனை!
மும்பை: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.
கடந்த 50 வருடமாக ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தியவர், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது.
இது எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்காக மீண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம்.. பிரபலங்கள் உருக்கம்
தனியார் மருத்துவமனை
இதனால் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும் விரைவில் குணமாகி திரும்பிவிடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 13 ஆம் தேதி அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.
செயற்கை சுவாசம்
அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவர் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
முன்னேற்றம்
பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் விழிப்புடன் இருக்கிறார் என்றும் பேசுவதை புரிந்து கொள்கிறார் என்றும் அவர் மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்து இருந்தார். பின்னர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டார் என்றும் கூறினார். இதனால் ரசிகர்களும் திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கவலைக்கிடமாக
51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை நேற்று திடீரென்று மோசம் அடைந்தது. அவர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
நடிகர் சல்மான்கான்
இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் அவர் குணமடைய பிரார்த்தித்து வருகிறார்கள். இதுபற்றி பாலிவுட் நடிகர் சல்மான்கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பூரண உடல்நலத்துடன் குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன். எனக்காக பாடிய ஒவ்வொரு பாடலுக்காகவும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்