Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சூர்யாவை பார்த்து பயந்த சமந்தா... என்ன காரணம்னு பாருங்க!
சென்னை : நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த ட்ரீட்களால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுகின்றனர். அவருடன் ஏராளமான நடிகைகள் நடித்திருந்தாலும் சமந்தா அவருக்கு பெஸ்ட் ஜோடியாக கொண்டாடப்படுகிறார்.
அடேங்கப்பா.. மயிலாகவே மாறிய சமந்தா.. மெர்சல் காட்டும் கவர்ச்சி.. இப்படியே போனா என்ன ஆகிறது?
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது சூரரைப் போற்று, ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இதில் சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் ஓடிடியில் வெளியான நிலையிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.
எதற்கும் துணிந்தவன் படம்
3 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியான இவரது எதற்கும் துணிந்தவன் படமும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். பாலியல் வன்முறைக்கு எதிரான கருத்துக்களை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.
பாலா இயக்கத்தில் சூர்யா
இதையடுத்து தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா இணைந்துள்ளார். இந்தப் படத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளது. படத்தின் முதல்கட்ட சூட்டிங் 34 நாட்கள் தொடர்ந்து கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தை இந்த ஆண்டிற்குள் ரிலீஸ் செய்ய சூர்யா திட்டமிட்டுள்ளார்.
சூர்யாவின் 24 படம்
சூர்யா நடிப்பில் சிறப்பான பல படங்கள் வெளியாகியிருந்தாலும் அவருடைய கேரியரில் சிறப்பான படங்களில் ஒன்றாக 24 படம் காணப்படுகிறது. இந்தப் படத்தில் ஆத்ரேயா, சேதுராமன் மற்றும் மணி என 3 கதாபாத்திரங்களில் சூர்யா நடித்திருந்தார். படத்தை விக்ரம் குமார் இயக்கியிருந்தார்.
சயின்ஸ் பிக்ஷன் படம்
சயின்ஸ் பிக்ஷனை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. நித்யா மேனன் மற்றும் சமந்தா என இரண்டு நாயகிகள் படத்தில் நடித்திருந்தனர். படத்தில் 3 கேரக்டர்கள் இருந்த நிலையில் ஆத்ரேயா என்ற கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்தக் கேரக்டரில் மிரட்டியிருப்பார் சூர்யா.
|
சமந்தா பகிர்ந்த வீடியோ
இந்நிலையில் அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமந்தா பகிர்ந்திருந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தப் படத்தில் சூர்யாவின் கெட்டப் மாற்றங்கள் குறித்து அவர் தனது கருத்துக்களை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். காலையில் தன்னுடன் ஒரு ரொமாண்டிக் காட்சியில் சூர்யா நடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
சூர்யாவை பார்த்து பயம்
காலையில் தன்னுடன் ரொமாண்டிக் காட்சியில் நடித்த சூர்யா, மதியம் ஆத்ரேயா என்ற கேரக்டரில் நடித்ததாகவும் அந்த கேரக்டரில் சூர்யாவின் நடிப்பை பார்த்து தான் நிஜமாகவே பயந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு ஆத்ரேயா கேரக்டர் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.