பேண்ட் போட மறந்துட்டீங்களே சமந்தா: விளாசும் நெட்டிசன்ஸ்
சென்னை: சமூக வலைதளத்தில் சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.
நடிகை சமந்தா தனது கணவர் குடும்பத்தாருடன் ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். மாமனார் நாகர்ஜுனாவின் 60வது பிறந்தநாளை கொண்டாட அவர்கள் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர்.
வெளிநாடு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தை சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
சமந்தா
சமந்தா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவசரத்தில் பேண்ட் போட மறந்துவிட்டீர்களா என்று கேட்டுள்ளனர். அது என்ன சமந்தா வெளிநாட்டிற்கு சென்றாலே உங்களுக்கு உடம்பில் உடையே நிற்பது இல்லை. தமிழ்நாட்டு கலாச்சாரத்தை இப்படியா காற்றில் பறக்க விடுவது என்று நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

ஷாலினி அஜித்
வெளிநாட்டிற்கு சென்றாலும் எப்படி உடை அணிவது என்று சமந்தா ஜோதிகா மற்றும் ஷாலினியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். மாமனார், மைத்துனர் எல்லாம் உடன் வந்திருக்கிறார்கள் என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இப்படி உடை அணிந்ததுடன் அதை பெருமையாக புகைப்படம் எடுத்து வேறு வெளியிட்டுள்ளார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

வெட்கம்
சமந்தாவுக்கு தனக்கு திருமணமானதே மறந்துவிட்டது. ஏ மாய சேசாவே படத்தில் நடித்த சமந்தாவா இது?. இப்படி வெட்கம் இல்லாமல் போய்விட்டாரே. ஆடையை குறைப்பதில் பெண்களின் சுதந்திரத்தை காட்ட வேண்டாம். நல்ல குடும்பத்து பெண்ணாக இருக்க முயற்சி செய்யுங்கள் என்று ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாராட்டு
நெட்டிசன்கள் சமந்தாவை விளாச திரையுலக பிரபலங்களோ அவரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு செக்சி, ஹாட், அழகு என்று தெரிவித்துள்ளனர். தான் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் சமூக வலைதளவாசிகள் முழுநேரமாக தன்னை வறுத்தெடுப்பார்கள் என்பது சமந்தாவுக்கு தெரியும். ஆனால் அடுத்தவர்களுக்காக உடை அணிய முடியாது என்று சமந்தா ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











