Don't Miss!
- Finance என்னோட கணக்கே வேற தம்பி.. TCS கே.கிருத்திவாசன் அதிரடி அறிவிப்பு..!
- Lifestyle முருங்கைக்காய் கத்திரிக்காயை வெச்சு ஒருடைம் இப்படி கார குழம்பு செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க
- News லோக்சபா தேர்தல்.. தமிழ்நாட்டையே சுற்றி செல்லும் சிறப்பு ரயில் அறிவிப்பு.. கோவைக்கு லட்டு நியூஸ்
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 108எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
- Automobiles திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
- Sports இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை கழட்டி விட திட்டம்.. ரோஹித் - அகர்கர் சந்திப்பில் ட்விஸ்ட்
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
சூரரைப்போற்று அற்புதமான படைப்பு… ஆஹா ஓஹோ என பாராட்டிய சமந்தா !
சென்னை : சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்த ஒருத்தர் விடாமல் அனைவரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர் அதில் பல சினிமா பிரபலங்களும் உள்ளனர்.
சூர்யாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் பிரபலங்களும் பலர் படத்தை பாராட்டியுள்ள நிலையில் இப்பொழுது நடிகை சமந்தாவும் படத்தைப் பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என புகழ்ந்து உள்ளார்.
சூரரைப்போற்று
நடிகர் சூர்யா மற்றும் சுதா கொங்கரா முதல் முறையாக இணைந்த சூரரைப் போற்று திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில் ரசிகர்களும் இதை மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்து உள்ளனர்.
பொம்மி கதாபாத்திரம்
ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் சூரரைப்போற்று வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் சூர்யாவின் நடிப்பு தொடர்ந்து பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில் அதில் அபர்ணா பாலமுரளியின் சுந்தரி என்கிற பொம்மி கதாபாத்திரமும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பாராட்டி பதிவு
இவ்வாறு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த சூரரைப்போற்று மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழி பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்று வந்த நிலையில் இப்பொழுது பிரபல நடிகை சமந்தாவும் சூரரைப்போற்று படத்தைப் பாராட்டி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அற்புத படைப்பு
கணவர் நாக சைதன்யாவுடன் மாலத்தீவில் ஹாலிடேவை என்ஜாய் செய்து கொண்டிருந்த நடிகை சமந்தா ஓரிரு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் திரும்பிய நிலையில் சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தைப் பார்த்து ஆடிப்போன சமந்தா உடனடியாக சமூக வலைதளங்களில் சூரரைப்போற்று திரைப்படத்தை பற்றி ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே சூரரைப்போற்று மிகச்சிறந்த படம் எனவும் இது ஒரு அற்புத படைப்பு எனவும் பாராட்டியதோடு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மனதார பாராட்டிய சமந்தாவுக்கு அபர்ணா பாலமுரளி நன்றி தெரிவித்துள்ளார்.