Shaakuntalam Day 1 collection : சாகுந்தலம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை : சமந்தா நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியான சாகுந்தலம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சமந்தா, புராணக்கதை சாகுந்தலம் கதையில் நடித்துள்ளார்.
இதில் சகுந்தலையாக சமந்தாவும் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடித்துள்ளனர்.
காளிதாசரால் எழுதப்பட்ட சாகுந்தலம் என்ற புராண காதல் கதையை படமாக்கியிருக்கிறார் தெலுங்கு இயக்குநர் குணசேகர்.

சமந்தாவின் சாகுந்தலம் : மேனகா, விஸ்வாமித்ரரின் காதலின் சாட்சியாக பிறக்கிறார் சகுந்தலா. தன் தவத்தைக் கலைக்க இந்திரனால் மேனகை வந்தார் என்பதை தெரிந்து கொண்ட விஸ்வாமித்திரர் மேனகையை விட்டுச் சென்றுவிடுகிறார். இதனால், தங்களுக்குப் பிறந்த குழந்தையை கன்வ முனிவரின் ஆசிரமம் அருகே விட்டுச் செல்கிறார் மேனகா. அந்த குழந்தைக்கு சாகுந்தலா என பெயர் வைத்து சொந்த மகள் போல வளர்த்து வருகிறார் கன்வ முனிவர்.
காதலை நினைத்து உருகும் சமந்தா : அழகின் மொத்த உருவாக இருக்கும் சகுந்தலாவின் வாழ்க்கையில் புயல் சீறுகிறது. கன்வ முனிவரின் ஆசிரமத்துக்கு எதிர்பாராதவிதமாக வருகிறார் ஹஸ்தினாபுர அரசர் துஷ்யந்தன். அவரின் பார்வை சமந்தா மீது விழ இருவரும் காதலிக்கிறார்கள். அவரை காந்தர்வ திருமணம் செய்துகொண்டு, அவரது குழந்தைக்குத் தாயாகிறார். ஆனால், முனிவரின் சாபத்தால், துஷ்யந்தன், சாகுந்தலையின் காதலை மறந்துவிடுகிறான். புனிதமான அவளின் காதலால் அவள் அனுபவித்த துயரங்களையும், மாய சக்தியால் காதலை மறந்த காதலனை நினைத்து உருகுகிறாள் சகுந்தலா.
கிராஃபிக்ஸ் காட்சிகள் எடுபடவில்லை : புராணக்கதை என்பதால் அடுத்து என்ன ஆகும் என்று தெரிந்து இருந்தாலும், கதைக்கு இன்னும் அழகு சேர்த்து இருக்கலாம், படத்தில் வரும் காட்டு விலங்குகளின் கிராஃபிக்ஸ் காட்சிகள் எரிச்சலூட்டும் வகையில் இருந்தன. கிராபிக்ஸ் காட்சிக்காகத்தான் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது கூட கிராஃபிக்ஸ் காட்சிகள் எடுபடவில்லை.

ஒரே ஒரு ஆறுதல் : சாகுந்தலம் படத்தின் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் அது சமந்தா தான் அழகு நிறைந்த அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து இருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் அரசவையில் அவர் பேசும் வசனம் ரசிக்கும்படி இருக்கிறது. மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களின் நடிப்பும் மனதில் நிற்கவில்லை. சமந்தாவிற்காக வேண்டுமானால் இந்த படத்தை பார்க்கலாம்.
முதல் நாள் வசூல் : தமிழ்,தெலுங்கு, மலையாளம்,இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியான சாகுந்தலம் படம் உலகம் முழுவதும் ஐந்து கோடியை வசூலித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை என்பதால், சமந்தாவின் விஸ்வாசிகளால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











