Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான நாகசைதன்யா?… ஆனால்… ஒரே கண்டிஷன்!
சென்னை : தெலுங்கு நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைத்துறையில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த சமந்தாவும் நாகசைத்தன்யாவும் பிரிந்தது. திரைத்துறைக்கு மட்டுமல்ல அவர்களது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நாகசைதன்யாவின் 2வது திருமணம் குறித்த பேச்சு டோலிவுட்டில் அடிபட்டு வருவதால், இனி இவர்கள் சேரவே வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர்.
விஜய், தனுஷ் உடன் இணைந்து நடிக்க ஆவலாக உள்ளேன்.. பிரபல தெலுங்கு நடிகர் கிரீன் சிக்னல்!
நாகசைத்தன்யா, சமந்தா
நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான 'யே மாய சேசாவே' படத்தின் இணைந்து நடித்திருந்தனர். முதல் படத்திலிருந்த இவர் இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து, பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறினார் சமந்தா.
காதல் திருமணம்
இதையடுத்து, சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் பலத் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகைகள் பட்டியலில் இருந்தார் சமந்தா. இதையடுத்து, சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைதன்யாவின் குடும்ப பெயரை எடுத்துவிட்டு வெறும் 'S' என்று மட்டும் பதிவிட்டதால். இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் மனக்கசப்பு வெளியே தெரியத் தொடங்கியது.
பிரிந்தனர்
இவை அனைத்தும் வெறும் வதந்திதான் என்று நினைத்து வந்த நேரத்தில் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இவர்களது பிரிவு ரசிகர்களை மட்டுமில்லாது திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில், திருமண புடவையை நாகசைதன்யா குடும்பத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டார் சமந்தா. இதனால் இனி இவர்கள் சேரவே வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
விரைவில் அறிவிப்பு
இதனால், நாகசைதன்யாவின் பெற்றோர்களான நாகார்ஜுன் மற்றும் அமலா நாகசைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு நாகசைதன்யா ஒகே சொல்லிவிட்டதாகவும், ஆனால், நடிகை வேண்டாம் என்று பெற்றோருக்கு கண்டிஷன் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து அவர்களுடைய குடும்பம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படங்களில் பிஸி
ஆனால், சமந்தாவோ விவகாரத்துக்குப்பின் சகுந்தலம், யசோதா, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில், காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் 28ந் தேதி வெளியாகி உள்ளது. இதில்,சமந்தா,நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.