Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹீரோவாகும் "டிஎஸ்பி"... முதல் படத்திலேயே சமந்தாவுடன் ஜோடி!
சென்னை: இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்குப் படத்தில் ஹீராவாக அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் நாயகர்களாக மாறி வருகின்றனர். அந்த வகையில், தமிழில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வெற்றிப் படங்களைத் தந்து வருகின்றனர்.
தற்போது அந்த வரிசையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் சேர்ந்துள்ளார்.
ஒரு நாயகன் உதயமாகிறான்...
ஆனால், டிஎஸ்பி என சுருக்கமாக அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாவது தமிழில் அல்ல, தெலுங்கில். பிரபல தெலுங்கு விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான தில் ராஜு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
சமந்தா ஜோடி...
சுகுமார் இயக்கும் இந்தப் படத்தில் டிஎஸ்பிக்கு ஜோடியாக சார்மி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது டிஎஸ்பிக்கு நாயகியாக சமந்தா நடிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னணி இசையமைப்பாளர்...
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளார். இவர் இசையமைத்தப் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
அடுத்து தமிழ் தான்...
இந்தச் சூழ்நிலையில் தெலுங்கில் நாயகனாக அரிதாரம் பூச இருக்கிறார் இவர். தெலுங்கைத் தொடர்ந்து தமிழிலும் விரைவில் நாயகனாக இவரது அதிரடி பிரவேசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.