Don't Miss!
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'என்னது விஷாலுக்கு சம்பள பாக்கியா... அந்தப் படத்தாலே நான் போண்டிங்க!' - சமர் தயாரிப்பாளர்
விஷால் திரிஷா ஜோடி யாக நடித்த 'சமர்' படம் பொங்கலுக்கு ரிலீசானது. இப்படத்தை டி.ரமேஷ் தயாரித்து இருந்தார். திரு இயக்கினார். படம் வசூலில் சுமார் என்றாலும், பார்க்கும்படி இருப்பதாக பலரும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் 'சமர்' படத்தில் ரூ.75 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும் அதனை வாங்கி தரும் படியும் நடிகர் சங்கத்தில் விஷால் புகார் அளித்தார். இதன் மீது நடிகர் சங்கம் விசாரணை நடத்தியது.
இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தியது. அப்போது விஷாலுக்கு சம்பளம் முழுவதையும் கொடுத்து விட்டதாகவும் பாக்கி இல்லை என்றும் தயாரிப்பாளர் ரமேஷ் விளக்கினார். அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் 'சமர்' பட பிரச்சினையில் தனக்கு உதவவில்லை என்று நடிகர் சங்கம் மீது விஷால் குற்றம் சாட்டினார். சமர் தயாரிப்பாளர் ரூ.75 லட்சம் சம்பள பாக்கி தரவேண்டி உள்ளது என்றும் கூறினார்.
லிங்குசாமிக்கு நான் பணம் தரவேண்டியிருந்தபோது, என்னிடம் கறாராகே கேட்டு வாங்கிக் கொடுத்த சங்கம், 'சமர்' தயாரிப்பாளரிடம் இருந்து சம்பள பாக்கியை வாங்கித் தரவில்லை என்று விஷால் குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த 'சமர்' பட தயாரிப்பாளர் டி.ரமேஷ் கூறுகையில், "விஷாலுக்கு சம்பள பாக்கி இல்லை. முழு தொகையையும் கொடுத்து விட்டேன். 'சமர்' படத்தில் விஷாலுக்கு சம்பளமாக ரூ.3 கோடியே 75 லட்சம் கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த பணத்தை அவர் வாங்கி விட்டார். கூடுதலாக மேலும் ரூ.25 லட்சம் கொடுத்தேன். மொத்தம் ரூ.4 கோடி விஷாலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பேசிய சம்பளத்தை விட அதிகமாகவே வாங்கிவிட்டார்.
ஒரு பைசா கூட விஷாலுக்கு கொடுக்க வேண்டியது இல்லை. ஆனால் சமர் படத்தை வாங்கி வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்தப் படம் என்னை போண்டியாக்கிவிட்டது என்பதுதான் உண்மை," என்றார்.