அப்படியே அப்பா போல மனசு.. விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் சண்முக பாண்டியன் செய்த செயலை பாருங்க!
சென்னை: தேமுதிக நிறுவனரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக டிசம்பர் 28ம் தேதி காலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் நடைபெறுகிறது. மக்கள் வெள்ளத்தில் 2 மணி நேரமாக மிதந்து வந்த அவரது வாகனம் தேமுதிக அலுவலகத்திற்கு வந்தடைந்தது. அங்கே அரசியல் தலைவர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்தை ஏற்றிக் கொண்டு வந்த வாகனத்தில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விஜய பிரபாகரன் மக்களை பார்த்து கைகூப்பிய நிலையில், அழுத படியே வாகனத்தில் வந்தார். அவரை பார்த்து மக்கள் அழாதே ராசா என ஆறுதல் கூறி வந்தனர்.

ஆனால், விஜயகாந்தின் மற்றொரு மகன் சண்முக பாண்டியன் வாகனத்தில் வந்துக் கொண்டிருந்த போது கூட தாகத்தால் தவித்த தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொடுத்து வந்த காட்சி ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. விஜயகாந்தின் ரத்தம் ஆயிற்றே பசியோடும், தாகத்துடனும் யாரும் இருக்கக் கூடாது என தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கூட நினைக்கும் நல்ல மனசு இருக்கே அது தான் பெரிய விஷயம் என சண்முக பாண்டியனை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











