மதுக்கோப்பையுடன் போஸ் தரும் படத்தை வெளியிட்டதால் சமீரா ரெட்டி வழக்கு!
மதுக்கோப்பையுடன் போஸ் தருவது போன்ற படத்தை வெளியிட்ட கேரள பத்திரிகைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் நடிகை சமீரா ரெட்டி.
விஜய் மல்லையா தொடர்பான கட்டுரை அது. எண்ட் ஆப் குட் டைம்ஸ் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில், கையில் மதுக்கோப்பையுடன் சமீரா போஸ் தருவது போல படம் வெளியாகியுள்ளது.
இதனால் கொதிப்படைந்த சமீரா, அந்தப் பத்திரிகை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தென்னிந்திய மொழிப் படங்களில் தனக்கு உள்ள நல்ல இமேஜை கெடுக்கும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதால் வழக்கு தொடர முடிவு செய்துள்ளாராம் சமீரா.
"எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கட்டுரையில் தேவையின்றி என் படத்தை வெளியிட்டுள்ளது தவறு. வருத்தமளிக்கிறது," என்றார் சமீரா.
Comments


Click it and Unblock the Notifications
