Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கர்ப்பிணி இப்படி பிகினி அணியலாமா?: கலாய்த்தவர்களுக்கு சமீரா ரெட்டி நெத்தியடி
மும்பை: 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் நடிகை சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை கலாய்த்துள்ளனர்.
நடிகை சமீரா ரெட்டி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். 8 மாத கர்ப்பிணியான அவர் தனது 3 வயது மகன் மற்றும் கணவருடன் கோவாவுக்கு சென்றார். அங்கு கடற்கரையோரம் புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் சமீரா.
அந்த புகைப்படங்களை பார்த்த சிலர் அவரின் அழகை பாராட்டியிருந்தார்கள். மேலும் சிலரோ மேடம், உங்க கணவர் ரொம்ப ஹாட் என்று தெரிவித்தனர். இன்னும் சிலரோ கர்ப்பணியாக இருந்து கொண்டு இப்படி உடை அணிய வெட்கமாக இல்லையா, இப்படியா வயிற்றை காட்டுவது என்று கேட்டிருந்தனர்.
ஓராண்டாக சூர்யா என்.ஜி.கே.வாகவே வாழ்ந்தார்: செல்வராகவன் புகழாரம்
நெட்டிசன்கள் தன்னை விளாசுவதை பார்த்த சமீரா ரெட்டி அவர்களுக்கு திருப்பி கொடுக்க முடிவு செய்தார். இதையடுத்து மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவர் இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்துள்ளார்.
View this post on InstagramA post shared by Sameera Reddy (@reddysameera) on
சமீரா தன் வயிறை பெருமையாக காட்டுவதை பார்த்து திட்டியவர்களுக்காகவே இப்படி ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். ஒரு கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை திட்டுவது தவறு என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீரா கர்ப்ப காலத்தில் என்ன உடை அணிய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. அவர் அணியும் உடையால் அவரின் கணவருக்கே பிரச்சனை இல்லை. அப்படி இருக்கும்போது நெட்டிசன்கள் சமீரா ரெட்டியை கிண்டல் செய்வதும், கடுமையாக விமர்சிப்பதும் தவறு.
முதல் பிரசவத்திற்கு பிறகு சமீரா தான் 100 கிலோவுக்கு மேல் இருந்ததாக தெரிவித்தார். அதையும் நினைவூட்டி சமீராவை கிண்டல் செய்துள்ளனர் நெட்டிசன்கள். பிரசவம் நெருங்கும் நேரத்தில் சமீராவுக்கு இந்த நெட்டிசன்களால் தேவையில்லாத மனஉளைச்சல்.
முதல் முறை கர்ப்பமாக இருந்தபோது சில பிரச்சனை ஏற்பட்டு மாதக் கணக்கில் படுத்த படுக்கையாக இருந்தார் சமீரா. நல்ல வேளையாக இந்த முறை அப்படி எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அதனால் அவர் தனது கணவர், மகனுடன் மனதிற்கு பிடித்த இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார். அவரவர் வாழ்க்கையை அவரவர் விருப்பப்படி வாழ விடலாமே.