எங்களைப் பார்த்தா அப்படியா தெரியுது.. கோவாவிலிருந்து செல்லமாக கேட்ட சமீரா ரெட்டி!

கோவா : வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி கோவாவில் வசித்து வருகிறார்.

கோவா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட இடங்களில் தக்தே புயல் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது.

இந்நிலையில் கரண்ட் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கூட இல்லாமல் தக்தே செய்துள்ளதை குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராமில் சமீரா ரெட்டி பதிவிட்டுள்ளார்.

குடும்பத்தினருடன் சமீரா

குடும்பத்தினருடன் சமீரா

வாரணம் ஆயிரம் படத்தில் அழகு தேவதையாக வந்து பாதியிலேயே காணாமல் போவார் சமீரா ரெட்டி. தொடர்ந்து தமிழில் மூன்று படங்களில் நடித்துவிட்டு இன்டஸ்ட்ரீயில் இருந்தும் காணாமல் போனார். தற்போது கோவாவில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் சமீரா.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தக்தே புயல் கோர தாண்டவம் ஆடியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகள்கூட இல்லாமல் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமீரா ரெட்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மழையும் அதிகமாக உள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீரா அப்டேட்

சமீரா அப்டேட்

அதிகமான காற்றால் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை பழுதடைந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கரண்ட் இல்லாமல் சில தினங்களாக அவதியுற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவரது பெட் டாக் டாமி மிகவும் பயந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தூங்குமூஞ்சி யார்?

சுற்றிலும் சுழன்றடிக்கும் காற்றால் அது அவ்வாறு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விலங்குகள் மிகவும் நாசுக்கானவை என்றும் அவற்றிற்கு அதிக அக்கறை தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக தனது டாமியுடன் தான் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், இருவரில் யார் தூங்குமூஞ்சியாக தெரிவதாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X