என்னாது.. "ஏ" சர்ட்டிபிகேட் படத்தில் நடிக்கப்போறேனா?.. சாம்ஸ் புது விளக்கம்
சென்னை : இருட்டு அறையில் முரட்டுக்குத்துப்படத்தில் சாம்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, "யு" சர்ட்டிபிகேட் படத்தில் நடித்து பிரபலமாவதை விட "ஏ" சர்ட்டிபிகேட் படங்களில் நடித்து பிரபலமாகி கொள்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடிக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் உண்டு அதிலும் கிரேஸி மோகனின் காமெடி இன்றளவும் பேசப்படுகிறது. அவரின் வசனங்கள் மற்றும் நடிப்பும் மிகவும் அற்புதமாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியவர் தான் சாம்ஸ்.

கிரேஸி மோகனின் மேடை நாடகங்களில் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டியிருந்தவர். பின் திரைதுறையில் காதல் மன்னன் படத்தில் மூலம் அறிமுகமானார்.
இவர் ரஜினி, விஐய் மற்றும் பலருடன் இணைந்து நடித்துள்ளார். இவரை மக்களிடையே எடுத்துசென்ற படம் 'அறை என் 305 ல் கடவுள்' இதில் ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் நடித்து இருப்பார். அந்த படத்தில் இவர், பைக் வாங்கிட்டேன்,கார் வாங்கிட்டேன் கடைசியா ஹெலிக்காப்டர் வாங்கிட்டேன் என்று வரும் காட்சி உண்மையிலேயே ரசிக்கும் படியாகவும், சிரிக்கும் படியாகவும் இருந்த இந்த படத்தின் மூலம் இவர் பிரபலமானார். அடுத்தாக இவர் நடித்த படம் தான் 'பயணம்' இந்த படத்திலும் இவரின் காமெடி நடிப்பு மிகவும் பேசப்பட்டது.

இந்த இரண்டாம் பாகத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை பற்றி சாம்ஸிடம் கேட்டப்போது, நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறீர்கள் தற்போது ஏன் இப்படி பட்ட படம் என்று கேட்டதற்கு, நான் "யு" சர்ட்டிபிகேட் படத்தில் நடித்து பிரபலமாவதை விட "ஏ" சர்ட்டிபிகேட் படங்களில் நடித்து பிரபலமாகி கொள்கிறேன் என்று கூலாக பதில் அளித்தார் சாம்ஸ். இவரு சொல்றத பார்த்த முதல் பாகம் விட, இரண்டாம் பாகத்திலும் டபில் மீனிங் காமெடி அதிகமா இருக்கும் போல தெரியுதே.


Click it and Unblock the Notifications











