Don't Miss!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிப்புச் சமுத்திரத்தின் ஒரு துளி.. இந்த சமுத்திரக் கனி..!
சென்னை: திடீர் இட்லி போல திடீர் நடிகர்கள் இப்போது சகஜம். ஆனால் அட்டகாசமான நடிப்புத் திறமையுடன் கூடிய திடீர் நடிகர்கள் பிரமிக்க வைப்பார்கள். அப்படிப்பட்ட அரிதிலும் அரிதான நடிகர்களில் ஒருவர்தான் இயக்குநர் சமுத்திரக்கனி.
இவர் நடிப்பதில் எந்த ஆச்சரியமும் இருக்க முடியாது.. காரணம் இவர் இருந்து வந்த பட்டறை அப்படி.. "கேபி" கேம்ப்பிலிருந்து வந்தவர் சமுத்திரக்கனி. பிறகு எப்படி நடிக்காமல் இருக்க முடியும். கல்லையும் கவிதை பாட வைக்கும் சிற்பியாயிற்றே கேபி.
கேபியின் சிஷ்யராக இருந்தாலும் கூட சினிமாவில் தனது இடத்தைப் பிடிக்க சமுத்திரக் கனி போராட வேண்டியிருந்தது. இயக்குநராக தன்னை நிரூபிக்க ரொம்பவே போராடினார் சமுத்திரக்கனி
டிவியில்தான் தனது திறமையை முதலில் நிரூபிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. டிவியில் தனது முத்திரையைப் பதித்த சமுத்திரக்கனி சினிமாவில் தனது தடத்தைப் பதிக்க சரியான தருணத்திற்காக காத்திருந்தார்.. கொக்கு போல.
நடிக்கவே ஆசை
உண்மையில் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில்தான் இருந்தாராம் சமுத்திரக்கனி. ஆனால் உன் முகம் அதுக்கேத்த மாதிரி இல்லையே என்று பலரும் கூறவே நடிப்பை விட்டு விட்டு இயக்குநராகும் வேலையில் இறங்கினார் சமுத்திரக்கனி.
அண்ணி - அரசி - செல்வி
இவரது கைவண்ணத்தில் ரமணி வெர்சஸ் ரமணி, அண்ணி, அரசி, செல்வி ஆகிய டிவி சீரியல்கள் மிகப் பிரபலமானவை, டிரெண்ட் செட்டராக அமைந்தவை.
டப்பிங் பேசி, பாட்டுப் பாடி
இயக்குநராக மட்டுமல்லாமல் பாடகராக இரு படங்களில் குரல் கொடுத்துள்ளார் சமுத்திரக்கனி. டப்பிங் பேசியுள்ளார். ஆடுகள்ம் படத்தில் கிஷோருக்குக் குரல் கொடுத்தவர் சமுத்திரக்கனிதான்.
நடிகராக
நடிகராக இவருக்கு சுப்பிரமணியபுரம் பெரிய பிரேக்காக அமைந்தது. தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய வில்லன் நடிகர் கிடைத்திருப்பதை அது கட்டியம் கூறியது.
ரஜினி முருகனில் செம ரகளை
அதன் பிறகு நடிப்பு, இயக்கம் என மாறி மாறி செயல்பட்டு வந்த சமுத்திரக்கனிக்கு ரஜினி முருகன் டாப்மோஸ்ட் ஹிட்டாக அமைந்தது. சமுத்திரக்கனியின் சிலம்பலான நடிப்பை பார்த்து ரசிக்காதவர்களே கிடையாது. பாராட்டுக்களை வாரிக் குவித்தார் சமுத்திரக்கனி.
அங்கீகாரம்
இயக்குநரா, டப்பிங் கலைஞராக, பாடகராக, நடிகராக பல அவதாரம் பூண்டவரான சமுத்திரக்கனிக்கு இன்று நடிப்புக்காக அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உண்மையான உழைப்புக்குக் கிடைத்த உயர்வான அங்கீகாரம் இது... வாழ்த்துகள்!