twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குறும்படத்தை ஒத்துக்க மாட்டேன்.. ஆரி பேசுனது ரொம்ப தப்பு.. வெளியேறியும் வீம்பு பண்ணும் சம்யுக்தா!

    |

    சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய சம்யுக்தா யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

    பிக் பாஸ் வீட்டிலேயே, ஆரி கத்தியது தான் தன்னால் ஜீரணிக்க முடியாத சம்பவம் என சொன்ன சம்யுக்தா, கமல் போட்டுக் காட்டிய குறும்படத்தையும் ஒத்துக்க மாட்டேன் என அடம்பிடித்துள்ளார்.

    மேலும், டைட்டில் வின்னராக யாருக்கு தகுதி இருக்கு என்றும், பாலா பற்றியும் மனம் திறந்துள்ளார்.

    பாலாவுக்கு கேக் ஊட்டி விடும் ஆரி.. பயில்வான் பிறந்தநாள் கொண்டாட்ட புரமோவிலும் ஏறும் மைலேஜ்!பாலாவுக்கு கேக் ஊட்டி விடும் ஆரி.. பயில்வான் பிறந்தநாள் கொண்டாட்ட புரமோவிலும் ஏறும் மைலேஜ்!

    அவுட்டான சம்யுக்தா

    அவுட்டான சம்யுக்தா

    டாப்புள் கார்டை அறிமுகப்படுத்தி சம்யுக்தா வெளியேற்றப்பட்டதை அவர் இன்னமும் ஜீரணிக்கவில்லை. அனிதா சம்பத், அழகாக வைத்த ஆப்பு காரணமாக சம்யுக்தா, கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறவே மனம் இல்லாமல் வெளியேறினார்.

    கலீஜ் பிரச்சனை

    கலீஜ் பிரச்சனை

    சனம் ஷெட்டியை பார்த்து கலீஜ் என திட்டியது மிகப்பெரிய சர்ச்சையாக சமூக வலைதளங்களில் கிளம்பியது. அது குறித்து பேசிய சம்யுக்தா, கால் டாஸ்க்கிற்கு முன்னதாக சனம் ரொம்பவே தயார் ஆகிக் கொண்டிருந்தார். நான் தான் அவருக்கு ஆக்சுவலா சில ஐடியாக்கள் கொடுத்தேன். அதன் பிறகு பார்த்தால், தனக்கே அவர் கால் பண்ணியது ஷாக்கிங்காக இருந்தது. கலீஜ் பிரச்சனை பற்றி பேசிய, அதை தான் ஹர்ட் பண்ணும் நோக்கில் பேசவில்லை என்றும், வெளியே வந்த உடன் அது பற்றி பேசி சமாதானம் ஆகியதாக தெரிவித்தார்.

    ஆரி பேசியது ரொம்ப தப்பு

    ஆரி பேசியது ரொம்ப தப்பு

    ஒரு பொண்ணை அப்படி கத்தி ஆரி பேசினது ரொம்ப தப்பு என வெளியே வந்து கொடுத்த பேட்டியிலும் சம்யுக்தா தனது விஷத்தை கக்கி உள்ளார். மற்ற போட்டியாளர்களுடன் நடந்த சண்டையை எல்லாம் மறந்து விட்டு ஸ்போர்ட்டிவாக பேசும் சம்யுக்தா, ஆரி பற்றி மட்டும் இப்படி பேசுவது பாலாவை வின் பண்ண வைப்பதற்காகத் தான் என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. கமல் போட்டுக் காட்டிய குறும்படத்திலும் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.

    ஆஜீத் ஜெயிக்க மாட்டான்

    ஆஜீத் ஜெயிக்க மாட்டான்

    சம்யுக்தாவுக்கு பிக் பாஸ் வீட்டில் மகனாக இருந்தது ஆஜீத் தான். வெளியே வரும் போதும், அவரை கட்டியணைத்து அழுது புலம்பி, உண்டியலை உடைத்து அதில் இருந்த காயின்களையும் அப்படியே ஆஜீத்துக்குத் தான் சம்யுக்தா கொடுத்தார். இந்நிலையில், ஆஜீத் கேம் எப்படி என்கிற கேள்விக்கு, ஆஜீத் நல்லா விளையாடினாலும், டைட்டில் வின் பண்ணும் திறமை இல்லை என தடாலடியாக சம்யுக்தா கூறியுள்ளார்.

    இவங்க வின் பண்ணலாம்

    இவங்க வின் பண்ணலாம்

    சம்யுக்தாவின் கணிப்பு படி பிக் பாஸ் டைட்டிலை இந்த சீசனில் ரம்யா பாண்டியன் வெல்ல ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளதாக சம்யுக்தா தெரிவித்துள்ளார். அர்ச்சனா கேங்கில் உள்ள யாரும் டைட்டிலை தட்டிச் செல்ல முடியாது என்பதையும் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

    வெளியே வந்தும் திருந்தல

    வெளியே வந்தும் திருந்தல

    பிஹைண்ட்வுட்ஸில் வெளியாகியுள்ள சம்யுக்தாவின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், வெளியே வந்தும் டம்மி மம்மிக்கு திமிர் அடங்கல என்றும், அனிதா சம்பத் சரியான ஆப்பு வைத்துத் தான் இவரை வெளியேற்றி உள்ளார் என்றும் எப்போதான் சம்யுக்தா திருந்துவீங்க என்றும் ஏகப்பட்ட கமெண்ட்களை போட்டு திட்டி வருகின்றனர்.

    English summary
    Samyuktha first interview after out from Bigg Boss Tamil 4. She talks about Aari’s behavior and Sanam’s fight and also about Bala and other contestants.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X